districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு

தருமபுரி, நவ. 25- அரசு மதுபானக்கடை  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டைமேடு கிராம மக்கள் தருமபுரி ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வட்டத்திற்குபட்டது. கோட்டை மேடுகிராமம். இக்கிராமத்தின் அருகில் குரவா னூர், சாலை வலசு, பி. கே. நகர், குமரிமடுவு ஆகிய கிராமங்க ளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர்.  கோட்டைமேடு பகுதியில் அரசு மதுபானக்கடை திறக் கும் இடத்தில் அங்கன்வாடி மற்றும் அரசு துவக்கப்பள்ளி ஆகியவை நூறுமீட்டர் தொலைவில் உள்ளன. சுற்றுவட்டார  கிரமங்களின் பிரதான சாலை என்பதால் மாணவர்கள், பெண் கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. மேலும் மதுபானக்கடை அமைய உள்ள பகுதியில் ஒகேனக் கல் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. குடிநீர் எடுத்து வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற் படும். எனவே இப்பகுதியில் அரசு மதுபானக்கடை அமைக் கும் முடிவைகைவிடவேண்டும் என தெரிவித்துள்ளனர். 

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி, நவ.25- விவசாயிகள் குறை தீர் கூட்டம் வெள்ளியன்று ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெறும் என ஆட்சியர் கி.சாந்தி தெரி வித்துள்ளார். தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற நவ- 29. வெள்ளியன்று முற்பகல் 11.00  மணியளவில் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள் ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர் பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக்  கூறி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

சாயக்கழிவு நீர் வெளியேற்றம்

 நாமக்கல், நவ. 25-  பள்ளிபாளையத்தில் பெரும்பாலான கிணறுகளின் சாயக்கழிவு நீர் கலந்து  சிவப்பு நிறமாக தண்ணீர் வந்ததையடுத்து, சாயக்கழிவு நீர் கலந்த கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நக ராட்சிக்குட்பட்ட 12 ஆவது வார்டு  தேவாங்க புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த  வாரத்தில்,  நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில்,  வணிக வர்த்தக நிறுவனங்களில், போர்வெல்  குடிநீரில் சிவப்பு நிறத்தில் சாயக்கழிவு நீர்  கலந்ததால் பொதுமக்கள் அந்த நீரை பயன்ப டுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே நீர் நிறம் மாறாமல் இருப்பதால் இதை பருகும் பொது மக்களுக்கு தோல் அலர்ஜி, உடல்நலக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகி றது. இதில் தேவாங்கபுரம் பகுதியில்  கிணறு  ஒன்றின் நீர் முழுவதுமாக சிவப்பு நிறத்தில் காணப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் அறிவு றுத்தலின்படி கிணற்று நீர் ஊறி மற்ற அனைத்து பகுதிகளிலும் பரவி நீர் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கிணற்று  நீரை வெளியேற்றுவதற்கு அறிவுறுத்தினார்.  இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்க ளாக  மின் மோட்டார் மூலம் கிணற்றிலிருந்து  முழுவதுமாக சிவப்பு நிறத்தில் உள்ள சாயக்க ழிவு நீர் கலந்த நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. தொடர்ந்து குடிநீர் நிறம் மாறி வந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

உதகைக்கு ஜனாதிபதி வருகை: சாலை சீரமைப்புப் பணி தீவிரம்

உதகை, நவ.25- ஜனாதிபதி வருகையொட்டி தீட்டுக் கள் மைதானத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. மேலும், சாலை  சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.  ஜனாதிபதி திரெளபதி முர்மு 4 நாட் கள் பயணமாக  தமிழ்நாட்டிற்கு 27 ஆம்  தேதியன்று வருகிறார். இதை தொடர்ந்து அவர் 4 நாட்களும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி ஜனாதிபதி திரௌபதி முர்மு,  27 ஆம் தேதியன்று (புதன்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம்  கோவை மாவட்டம், சூலூர் விமானப் படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள  ராஜ்பவனுக்கு வந்து தங்குகிறார். இதையடுத்து, 28 ஆம் தேதியன்று கார்  மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில்  அமைந்துள்ள ராணுவ பயிற்சி கல்லூரி யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங் கேற்று உரையாற்றுகிறார். இதை தொடர்ந்து, அவர் 30 ஆம் தேதியன்று காலை ஹெலிகாப்டர் மூலம்  கோவை  சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி, உதகை தீட்டுக்கள் ஹெலிகாப்டர் மைதானம் ராணுவம் மற்றும் போலீசார்  கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெற்றது. மேலும், ஹெலிகாப்டர் தளத் தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மூன்று ஷிப்டுகளாக கண்காணிப்பு பணியில் உள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவி னரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள் ளனர். இதேபோல் உதகையில் இருந்து  குன்னூர் செல்லும் சாலைகளை சாலை களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆடைகளை கொள்முதல் செய்து பணம்  கொடுக்காமல் மோசடி செய்தவர் கைது

திருப்பூர், நவ.25 - திருப்பூரில் பனியன் உற்பத்தியாளர்களிடம் ஆடைகளை  பெற்று பணம் கொடுக்காமல் மோசடி செய்தவரை மாநகர  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இணைய தளம் மூலம் ஜவுளி ஆர்டர் தேவைப்படுவதாக திருப்பூர்  பனியன் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டார். இதைத் தொடர்ந்து திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் விசாரித்தபோது, சாம்பிள் ஆடைகளை பார்த்து தேர்வு செய்து பாலமுருகன் ஆர்டர் கொடுத்துள்ளார். திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்களும் ஆர்ட ருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பி வைத்தனர். சில ருக்கு ஆர்டர் கொடுத்த தொகையில் பாதியளவு பணம் கொடுத்து வர்த்தகம் செய்ததாக தெரிகிறது. இவ்வாறு திருப் பூரில் உள்ள பல பனியன் உற்பத்தியாளர்களிடம் கோடிக் கணக்கில் ஆடைகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கா மல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளியன்று பாலமுருகன் திருப்பூர்  வந்தபோது, அவரால் பாதிக்கப்பட்ட பனியன் உற்பத்தியா ளர்கள் அவரை பிடித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 50-க் கும் மேற்பட்டவர்களிடம் ஆடை வாங்கிக் கொண்டு கோடிக் கணக்கில் பணம் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. முதல்கட்டமாக 5 உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ரூ.50 லட்சம்  மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து  மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். பாலமுருகனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பி ரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். 

புதுப்பாளையம் ஊராட்சியில் தொடர் ஊழல்கள்:  தலைவர், துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், நவ.25- புதுப்பாளையம் ஊராட்சி யில் தொடர்ந்து ஊழல்கள்  நடைபெற்றது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால், புதுப்பாளையம்  ஊராட்சித் தலைவர் மற்றும்  துணைத் தலைவர் இருவரையும்  பதவி நீக்கம் செய்ய வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலியுறுத்தி உள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாளை யம் ஊராட்சிக் கிளைகளின் சார் பில் திங்களன்று நடைபெற்ற திருப் பூர் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்  கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இந்த மனுவில் கூறப்பட்ட இருப் பதாவது: அவிநாசி வட்டம் புதுப் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன் ராமபுரம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு தன்னிச் சையாக காவலர் நியமித்து மாதா மாதம் ரூபாய் 9360 ஊராட்சி நிதியி லிருந்து எடுத்துள்ளனர். இது பற்றி  மார்க்சிஸ்ட் கட்சி தொடர்பு புகார்  அளித்ததன் விளைவாக அவிநாசி  வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம  ஊராட்சிகள்) மூலம் சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு, குழு நிய மித்து குறைபாடுகள் கண்டறியப் பட்டன. தன்னிச்சையாக சமுதாய நலக்கூடத்திற்கு காவலர் நியமித்து  ஊதியம் வழங்கிய செலவுத் தொகை ரூபாய் 2, 24,640-ஐ ஊராட்சி  நிதி கணக்கில் செலுத்தி அதற்குண் டான ரசீதை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  இதன்மூலம் ஊராட்சி நிர்வா கம் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எண்ணற்ற செலவி னங்கள் முறையாக விவாதிக்கப் படாமல் பராமரிப்பு செலவு என்ற  பெயரில் லட்சக்கணக்கில் ஊராட்சி  நிதி எடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் நவம்பர் 1ஆம் தேதி  உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை  கூட்டம் கடந்த 23ஆம் தேதி நடத்தப் பட்டபோது, மக்களுக்கு முறை யாக அறிவிப்பு வழங்கப்படாமல், சுழற்சி முறையையும் பின்பற்றா மல் ஊராட்சி மன்ற அலுவலகத் திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தலைவர் கூறியுள்ளார். ஊராட்சித் தலைவ ரின் கணவரின் தலையிடும் ஊராட்சி நிர்வாகத்தில் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரை யும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாளையம் ஊராட்சி  கிளைகள் சார்பில் கேட்டுக்  கொண்டுள்ளனர்.  வஞ்சிபாளை யம் வடக்கு கிளைச் செயலாளர், புதுப்பாளையம் ஊராட்சி எட்டா வது வார்டு உறுப்பினர் கே. பால சுப்பிரமணியம், சௌடாம்பிகை நகர் கிளைச் செயலாளர் ஒன்பதா வது வார்டு உறுப்பினர் கே. குமர வேல், வஞ்சிபாளையம் தெற்கு  கிளைச் செயலாளர் அனிபா, பொன்  ராமபுரம் கிளைச் செயலாளர் எஸ். துரைசாமி, முருகம்பாளையம் கிளைச் செயலாளர் எம்.செல்வ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து

திருப்பூர், நவ.25 - காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  காங்கேயத்தில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.கணே சன் தலைமையில், தாலுகாவிற்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணிகண்டன் மற் றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்ட னர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம்: காங்கேயத்தில் இருந்து தினமும் நூற் றுக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு செல் லும் நிலை உள்ளது. இங்கிருந்து நேரடியாக பேருந்து வசதி இல்லாததால் ஈரோட்டிற்குச் சென்று பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் காங்கேயத்தில் இருந்து தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி சென்னைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து வசதியை தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஏற்ப டுத்தி தர வேண்டும். மேலும் காங்கேயம் தாலுகா வெள்ள கோவில் பேருந்து நிலையத்தில் இரவு நேரம்  பேருந்துகள் வருவதில்லை. இதனால் பெண் கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள் ளிட்ட பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே  வெளியூர் பேருந்துகள் இரவு நேரங்களில்  வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்திற் குள் வந்து செல்ல வேண்டும், அரசு போக்கு வரத்து கழகம் இப் பிரச்சனைகளில் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.

மருத்துவர் மீது தாக்குதல் போராட்டம் நடத்த முடிவு

மருத்துவர் மீது தாக்குதல் போராட்டம் நடத்த முடிவு உடுமலை, நவ.25- மடத்துக்குளம் அரசு மருந்துவர் மீது தாக்குதல் நடத்திய சமுக விரோதியை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து நவ. 29 ஆம்தேதி போராட்டம் நடத்த  அரசு ஊழியர் சங்க மகளிர் துணைக்குழு மாநாட்டில் முடி வெடுக்கப்பட்டது. அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு மாநாடு  ஞாயிறன்று  உடுமலையில் நடைபெற்றது. இம்மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது, மடத் துக்குளம் அரசு மருத்துவமனை பெண் உதவி மருத்துவ  அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்கு தலை நடத்தி அச்சுறுத்திய முத்துராஜ் மீது நடவடிக்கை  எடுக்காமல், காவல் துறையின் சொந்த பிணையில் விடுவித்து  இருக்கிறார்கள். இதனால் இங்கு அசாதாரண சூழல் நில வியுள்ளது. தாக்குதல் நடத்திய முத்துராஜிற்கு சாதகமாக  செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் கோமதி மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்குளம்  அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு  வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக் குழு சார் பில் நவம்பர் 29 ஆம் தேதி மடத்துக்குளம் அரசு மருத்துவ மனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப் பட்டுள்ளது.

விளையாட்டு அரங்கம் அமைக்க சிபிஎம் மனு

கோவை, நவ.25- பேரூரில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விளை யாட்டு அரங்கம் மற்றும் முதியோர் நடைபயிற்சி மையம்  அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டா முத்தூர் ஒன்றியக் குழு சார்பில் திங்களன்று கோவை மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் உள்ள மருதமலை யில் அமைந்திருக்கும் சுப்பிரமனிய சுவாமி திருக்கோயி லின் உபகோயிலான கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயி லுக்குச் சொந்தமாக கோயிலின் பராமரிப்புக்காக தேவதாய  இனாமாக கீழ்க்கண்ட விபரப்படியான நிலங்கள் வழங்கப் பட்டுள்ளன. நிலங்கள் முற்காலத்து மன்னர்களால் இனா மாக தரப்பட்டது.  எனவே திருக்கோயில் நிலத்தை தமிழக அரசின் விளை யாட்டுத்துறை சார்பில் சட்ட விதிகளின்படி நிலத்தை கையகப்படுத்தி தமிழக அரசு கோவை மாநகரில் ஒரு  சிறப்பான விளையாட்டு அரங்கமும், முதியோர் நடைபயிற்சி  வளாகமும் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ள னர். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய  குழு செயலாளர் வி.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.ஆறுசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை
 

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை தருமபுரி, நவ. 25- விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ராமனூர் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கம்பட்டி ஊராட்சிக்குபட்டது. ராமனூர் கிராமம் இந்த கிராமம் வனத் தின் அருகாமையில் உள்ளது. அக்கிராமத்தை சேர்ந்தவர் கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வரு கின்றனர். குறிப்பாக நெல், வாழை, கரும்பு, ராகி, நிலக் கடலை, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடுக்கின்றனர்.  இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து விவ சாயப் பயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்கிறது. கடன் வாங்கி  விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம்  ஏற்படுகிறது. அறுவடைக்கு தயாராகும் நிலையில் பயிர் களை காட்டுப் பன்றி சேதப் படுத்துகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  எனவே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.

சுடுகாடு ஆக்கிரமிப்பு அதிகாரிகளை கண்டித்து தர்ணா 

திருப்பூர், நவ.25 - திருப்பூர் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றுவ தற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்கவில்லை எனச் சொல்லி கிராம மக்கள் தர்ணா வில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா உத்தம பாளையம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வரு கின்றனர்.  இப்பகுதியில் உயிரிழக்கும் மக்களை இங்குள்ள சுடுகாட் டில் அடக்கம் செய்து வந்தனர். இந்த நிலையில்,  கடந்த 6  மாதங்களுக்கு முன், இப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒரு வர், சுடுகாட்டைச் சுற்றி கம்பி வேலி அமைத்து ஆக்கிர மித்து உள்ளார் என மக்கள் தெரிவித்தனர்.  இதையடுத்து கடந்த 1ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட பொது மக்கள் சுடுகாடு ஆக்கிரமிப்பு குறித்து புகாரளித்தனர்.  இதைத் தொடர்ந்து சுடுகாட்டை ஆக்கிரமித்து அமைக்கப் பட்ட கம்பி வேலியை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத் தரவிட்டார். இதன் பிறகு இரண்டு வாரங்களுக்கு மேலாகி யும், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நடவடிக்கை  எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்  சாட்டினர். எனவே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்களன்று  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள்,  இது பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி  யளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது  மக்கள் கலைந்து சென்றனர்.