districts

img

விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா

பள்ளிபாளையம், பிப்.21- கூலி உயர்வு கேட்டு பள்ளிபாளையத்தில்  சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தி னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல், பள்ளிபாளையத்தில் விசைத் தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண்,பெண் தொழிலாளர்களுக்கும் 75 சத விகிதம் கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச  கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஞயிறன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய  தலைவர் அசன் தலைமையில் நடைபெற்ற  போராட்டத்தில், மாவட்ட செயலாளர் எம். அசோகன், தலைவர் கே.மோகன், ஒன்றிய  செயலாளர் எஸ்.முத்துக்குமார், சிஐடியு  மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.