districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்திலிருந்து எழுந்த புகை பயணிகள் அலறி அடித்து ஓட்டம் கோவை,

பிப்.12- கோவை அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல்  நிரப்பிக் கொண்டு இருந்த அரசுப் பேருந்தில் இருந்து  திடீரென புகை எழுந்ததால், பயணிகள் அலறி அடித்து  ஓட்டம் பிடித்தனர். திருப்பூரில் இருந்து கோவை நோக்கி பயணிக ளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்பு வதற்காக நின்றது. பணிமனை ஊழியர்கள் டீசல் நிரப்பி யதும் ஓட்டுநர் பேருந்தை இயக்க தொடங்கினார். அப் போது திடீரென பேருந்திலிருந்து புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தில் இருந்த பயணி களை இறங்குமாறு கூற, பயணிகள் அலறி அடித்து  பேருந்தில் இருந்து இறங்கினர். மேலும், பயணிகளை  பணிமனைக்கு வெளியே அனுப்பிய ஊழியர்கள், பேருந்தில் இருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டு  இருந்த நிலையில், உடனடியாக பேட்டரியில் இருந்து  செல்லும் இணைப்பை துண்டித்து பேருந்தை, டீசல்  நிரப்பும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, பயணிகள் மாற்று  பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிக ளுடன் இருந்த பேருந்தில் டீசல் நிரப்பும் இடத்தில் திடீ ரென பேருந்திலிருந்து புகை வந்ததால் அப்பகுதி யில் பரபரப்பான சூழல் நிலவியது. அந்த அரசு பேருந் தில் ஏற்கனவே கடந்த வாரம் “ஸ்டார்டிங் மோட் டார்” பழுதாகி இருந்த நிலையில், அதை மாற்றாமல் அப்படியே இயக்கியதால் தான் பேருந்தை ஸ்டார்ட்  செய்யும் போது மோட்டாரில் இருந்து புகை வந்ததாக  பணிமனை ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.

மெணசியில் புதிய வங்கி கிளை துவங்க வலியுறுத்தல் தருமபுரி,

பிப்.12- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி பகுதி யில் புதிய வங்கி கிளை துவங்க வேண்டும், என அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தைச் சுற்றி பூததநத்தம், குண்டல் மடுவு, விழுதிப்பட்டி, ஆலாபுரம், தோளனூர், ஜீவா நகர்  உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் பண பரிவர்த்தனை செய் வதற்கு தேசிய வங்கிகளோ, தனியார் வங்கிகளோ இப் பகுதியில் இல்லை. வங்கிகளுக்குச் செல்ல வேண்டு மென்றால் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ராமியன ஹள்ளி ஆகிய பகுதிகளுக்குதான் செல்ல வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள், சிறு, குறு விவ சாயிகள், வியாபாரிகள், வணிகர்கள், அரசு ஊழி யர்கள், ஏழை எளிய மக்கள் வங்கி கடன் பெறவும், முத லீடு செய்யவும், பாப்பிரெட்டிப்பட்டி நகரத்தை நாடி  செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, அனைத்து  தரப்பினரும் பயன்பெறும் வகையில், மெணசி கிராமத் தில் தேசிய வங்கி அல்லது தனியார் வங்கிகள் தொடங்க  வேண்டும் என மக்கள் பல வருடங்களாக அதிகாரிகளிட மும், அரசியல் பிரமுகர்களிடமும் கோரிக்கை வைத்தும்  கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மெணசி யில் வங்கி கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.