districts

img

லிப்ட் அமைக்கும் பணியை விரைந்து முடித்திடுக தருமபுரி ரயில் பயணிகள் கோரிக்கை

தருமபுரி அக். 8 – ஆயிரத்திற்கும் மேற் பட்ட பயணிகள் நாள் தோறும் வந்து செல்லும் தருமபுரி ரயில் நிலையத்தில்   முதியவர்கள், மாற்றுத்திற னாளிகள் அவதியைக் குறைக்க ரயில் நிலை யத்தில் லிப்ட் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.   தருமபுரி ரயில் நிலையம் வழியாக தினமும் 25 க்கும் மேற்பட்ட ரயில்கள்‌ மற்றும்  சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம், ஓசூர், பெங்களூரு மார்க்கமாக பல் வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இந்த ரயில்கள் செல்கின்றன. தினமும் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும்  பயணிகளை வழியனுப்ப வரும் பொது மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.  தற்போது ரயில்கள் அனைத்தும் 2 ஆவது  நடைமேடையில் தான் நின்று செல்கிறது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் வழி யாக வரும் பயணிகள் முதலாவது நடை மேடையில் இருந்து நடை மேம்பாலத்தின்  வழியாக தான் 2ஆவது நடைமேடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளி கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத் துக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் தண்ட வாளத்தில் இறங்கி செல்லும் நிலையும் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையும் ஏற்படுகிறது.  எனவே, 2 ஆவது நடைமேடையில் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டுமென ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத் தனர். அதன்படி, முதலாவது மற்றும் 2-வது  நடைமேடைகளில் ரூ.41 லட்சம் மதிப்பில்  லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இந்த பணிகள் பெரும்பாலும் முடிக்கப் பட்டு உள்ள நிலையில், மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டுவர காலதாமதம் ஏற்படு கிறது. எனவே, பொதுமக்கள் பயன்பா டிற்காக இந்த லிப்ட் அமைக்கும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.