தருமபுரி, டிச.26- தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே, ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடியில், புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம், சேலம் மாவட் டத்தில் இருந்து 1965 ஆம் ஆண்டு அக்.2 ஆம் தேதி பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அதன்பின் நிர்வாக கார ணங்கள், அதிகமான கிராமங்கள் மற் றும் பரந்து விரிந்த பகுதி காரணமாக, கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்.9 ஆம் தேதி, தருமபுரியில் இருந்து கிருஷ்ண கிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சேலத்தி லிருந்து தருமபுரி மாவட்டம் தனியாக பிரித்த பின்னர், 1967 ஆம் ஆண்டு ஆட்சி யர் அலுவலகம் கட்டப்பட்டு, அப்போ தைய முதல்வர் பக்தவத்சலம் திறந்து வைத்தார். தருமபுரியின் முதல் ஆட்சிய ராக திருமால் பணியாற்றினார். இது வரை 45க்கும் மேற்பட்ட ஆட்சியர்கள் பணியாற்றி உள்ளனர். தற்போதைய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல், பணிகள் இடம் விஸ்தரிப்பும், இடம் தேவைக ளும் அதிகரித்துள்ளது. தற்போதைய ஆட்சியர் அலுவலகம் பின்புறம், கூடு தல் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதுவும் போதுமான தாக இல்லை. சில அரசு துறைகள் வாடகை கட்டடங்களில் இன்னும் வெளி யில் இயங்கி வருகின்றன. இதனால் அர சுக்கு செலவு சுமையாக உள்ளது. அரசு அலுவலகங்கள் அரசு கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. தற்போதைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 34 துறைகள் இயங்கி வரு கின்றன. இக்கட்டடத்தில் இடம் இல்லா மல், தனித்தனியாக ஆங்காங்கே அரசு துறைகள் இயங்கி வருகின்றன. இதை தவிர்க்க ஒரு குடைக்குள் அனைத்து அரசு துறைகளும் கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது புதியதாக ஆட்சியர் அலுவல கம் கட்டுவதற்கு, சுற்றுலா ஓய்வு மாளிகை பின்புறத்தில், பழைய கோட் டாட்சியர் அலுவலக மைதானத்தில் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்போது ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 5 மாடி யில், புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் நடக்கும் இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகை யில், தருமபுரி - சேலம் சாலையில் ஆட்சி யர் அலுவலகம் 56 ஆண்டுகளாக ஒரே கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் முக்கிய அரசு துறைகள் இயங்க போதி இடவசதி இல்லை. இதை யடுத்து அனைத்து முக்கிய துறை களும், ஒரே கட்டடத்தில் இயங்க, புதிய ஆட்சியர் அலுவலகத்தின் முதன்மை கட்டடம் ரூ.36.62 கோடியில் தரை தளம் மற்றும் 5 மாடியில் கட்டப்பட்டு வருகி றது. தரைதளம் மற்றும் முதல் மாடி முடித்து, 2 ஆவது மாடி கட்டுமானப் பணி கள் நடந்து வருகிறது, என்றனர்.