தருமபுரி, ஜன.22- தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 14 வயது சிறு வன் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. தருமபுரி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் நடை பெற்ற ஜல்லிக்கட்டில் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள், வெளியேறியது. வெளியேறும் இடத் தில் உறவினருடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து கோகுல் என்ற சிறுவனை எதிர்பாராதவிதமாக காளை ஒன்று வயிற்றுப்பகுதியில் முட்டியது. இதில், படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, கோகுல் ஏற்கனவே உயிரிழந்தது விட்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.