தருமபுரி, பிப்.22- தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி யிலும், 10 பேரூராட்சிகளிலும் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தருமபுரி நகராட்சி 33 வார்டுகளில், 18 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 13 வார்டுகளிலும், திமுக கூட்டணி யிலுள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஒரு இடத் திலும் வெற்றி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட் டத்திலுள்ள, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, கடத்தூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கம் பைநல்லூர், பாப்பாரப்பட்டி, அரூர் என பத்து பேரூராட்சிகளிலும் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த இருபது வருடங்களுக்கு பிறகு (2001 ஆம் ஆண்டிற்கு பிறகு) தருமபுரி நகராட்சியை திமுக தனி பெரும்பான்மை யுடன் கைப்பற்றியிருக்கிறது. வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி தலைமையில் தருமபுரியில் உள்ள பெரியார், அம்பேத்கர், அண்ணா வின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் மே.அன்பழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.