தாராபுரம், பிப்.8- தாராபுரம் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியில் அமைச் சர்கள் ஆய்வு செய்தனர். தாராபுரம் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நல்லினி கல்லுாரி அருகே கரூர் மற்றும் பழனி செல்லும் சாலைகள் பிரிந்து செல்கின்றது. இப்பகுதியில் அதிக ளவு போக்குவரத்து நெரிசல் இருக் கும். இதனால் நான்கு முனைகளில் இருந்தும் வாகனங்கள் கடந்து செல் வதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற் படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் திங்களன்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பழனி கோவிலில் வழிபாடு செய்துவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இதேபகுதியில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த வாரம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக் கிறது. எனவே இப்பகுதியில் போக் குவரத்தை முறைப்படுத்தி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆகியோர் அதி காரிகளுடன் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.ஆய் வுக்குப்பின் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாக னங்கள் நின்று செல்லவும், போக்கு வரத்தை கண்காணிக்க காவலர் களை நியமிக்கவும் அதிகாரிக ளுக்கு ஆலோசனை வழங்கினர். போக்குவரத்து விதி மீறி செல்பவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கவும் உத்தரவிட்டனர். ஆய்வின் போது காவல் மற்றும் வருவாய், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.