districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

 தாராபுரம் : தமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு

தாராபுரம், மே 16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தாராபுரம் 3ஆ வது கிளை மாநாடு திங்களன்று பூங்காசாலை யில் உள்ள தமிழ்க்கலை மன்ற அங்கில் நடைபெற் றது. இந்த மாநாட்டுக்கு இரா. நடராஜன் தலைமை வகித் தார். இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் தலைவ ராக ஞா.மனுவேல், துணைத் தலைவர்களாக நராஜ்மோ கன், இரா.குப்புசாமி, செய லாளராக ஆ.மணியன், துணைச்செயலாளர்களாக சி.பாரதி, சொ.கண்ணுசாமி, பொருளாளராக பாலசுப்பி ரமணியம் ஆகியோர் அடங் கிய நிர்வாக குழுவும், செயற்குழு உறுப்பினர் களாக 21 பேரும் தேர்வு செய் யப்பட்டனர்.

கொலை மிரட்டல் - முன்னாள் ஊராட்சி மன்ற‌ தலைவர் புகார்

தருமபுரி, மே 16- அரசு நிலத்தை கையகப்படுத்தி யவர்களின் விபரத்தை அரசுக்கு தெரி வித்ததால், தன் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தரு மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சி னியிடம் முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆர்.கோபி நாதம்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன் னாள் ஊராட்சி மன்ற‌ தலைவர் சரஸ் வதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் ஆர்.கோபி நாதம்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் ஊராட்சிமன்ற‌தலைவராக பொறுப்பு வகித்தேன்.இவ்ஊராட் சிக்குட்பட்ட போளையம்பள்ளி கிரா மத்தில் சர்வே எண் 122/3 இல் அரசு புறம்போக்கு நிலத்தை சில தனிநபர் கள் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென் றேன். இதன்காரணமாக அரசு ஓடை புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் உங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்போம் என மிரட்டினர். அதன்பின் என் வீட்டிற்கு வரும் குடிநீர் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். மேலும் எங்களை சார்ந்துள்ள 9 குடும்பத்தாரின் குழந்தைகளை பொதுவழியில் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. எனது குடும் பத்தாரை துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என மிரட்டி வருகின்றனர். எனவே எங்களை ஊரைவிட்டு ஒதுக் கிவைக்கும் நோக்கிலும், என் குடும்பத் தாருக்கு கொலை மிரட்டல் விடும் நோக்கில் செயல்படும் கும்பல் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என அம் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

வாலிபர் அடித்துக் கொலை : 6 பேர் கைது

அவிநாசி, மே 15- அவிநாசி, பெருமா நல்லூர் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த பால முருகன் மகன் பாரதி (26). இவரது நண்பர்கள் மணி கண்டன் (25), சதீஷ் (22),  முருகேசன் (20 ஆகியோ ருடன் பெருமாநல்லூர் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு மதுபான கடைக்கு கடந்த இரு நாள் களுக்கு முன்பு மது அருந்தச் சென்றுள்ளார். அப் போது எதிரே அமர்ந்திருந்த மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாரதி, மணிகண்டன் ஆகியோர் பலத்த காயம டைந்து கோவை அரசு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பாரதி சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலை யில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரு மாநல்லூர் காவல்துறை யினர், பெருமாநல்லூர் அருகே போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த துரைப் பாண்டி(24), ஆனந்த் (22), விஜய்(21), சங்கர் (23), சுரேந்தர் (21) உள்ளிட்ட 6  பேரை கைது செய்துள்ள னர்.

ஆணவக் கொலை செய்ய பெற்றோர் திட்டம் காதல் திருமணம் செய்த பெண் ஆட்சியரிடம் புகார்

கோவை, மே 16- கோவையில் ஆணவக் கொலை செய்ய பெற்றோர்  திட்டமிடுவதாக கூறி காதல் திருமணம் செய்த பெண்  புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை செட்டிபாளையம் சண்முகா நகரை சேர்ந்தவர் ஜாவித் உசைன். இவரது மனைவி சமீனா (31). இவர் திங் கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது சொந்த ஊர்  ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி. நான் 2015ம் ஆண்டு  சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம் பாளையத்தை சேர்ந்த ஜாவித் உசேன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை  மீறி காதல் திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்க ளுக்கு 7 வயதில் காலித் உசேன் என்ற மகன் உள்ளான்.  எனது தந்தை புஞ்சை புளியம்பட்டியில் நகைக்கடை  வைத்து நடத்தி வருகிறார். எனது கணவர் ஏழ்மையான குடும் பத்தை சேர்ந்தவர் என்பதால் எனது தந்தையும், அவரது சகோ தரர்களும் என்னையும், எனது கணவரையும் பிரிக்கும் முயற் சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனது கணவரை தாக்குவதும், மிரட்டுவதுமாக இருந்தனர். இந்நிலையில் நாங்கள் பல ஆண்டுகள் அவர்களுக்கு தெரியாமல் பல் வேறு இடங்களில் வாழ்ந்து வந்தோம். தற்போது செட்டிபா ளையத்தில் வசித்து வருகிறோம். தற்போது, நாங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டவர்கள் என்னை யும் எனது கணவரையும் ஆணவ கொலை செய்ய திட்ட மிட்டு வருவதாக தெரிகிறது. எனவே எனக்கும், எனது கணவ ருக்கும், குழந்தைக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண் டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

மாற்றுத்திறனாளிகள்  சங்கம் புதிய கிளை அமைப்பு

நாமக்கல், மே 16- நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையம் ஒன்றியம், குப் பாண்டாபாளையத்தில் எஸ்.பி. செங்கோடன் தலை மையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற் றது. இதில் மாவட்ட அமைப் பாளர் எம்.ஆர்.முருகேசன் மற்றும் அர்ஜூனன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினார். கிளைத்தலைவ ராக எஸ்.பி.செங்கோடன், கிளைச்செயலாளராக கே. சண்முகம், கிளைப் பொரு ளாளராக பி.கெளரிசங்கரி, கிளை துணை தலைவராக பி.சங்கர், கிளை துணைச் செயலாளராக பி.செந்தில் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாதர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தாராபுரம், மே 16- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாராபு ரம் நாடார் தெரு கிளை மாநாடு ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பவித்ரா தேவி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் தலைவராக ராஜேஸ்வரி, செயலாளராக வளர்மதி, பொருளாளராக சின் னத்தாயி மற்றும் 8 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட் டது.