districts

இருளில் மூழ்கிய தருமபுரி புறநகர் பேருந்து நிலையம்

தருமபுரி, நவ.14- தருமபுரி பேருந்து நிலையத்தி லுள்ள உயர்மின் கோபுர விளக்கு பழு தானதால், தீபாவளி பண்டிகை விடு முறை முடிந்து வெளியூர்களுக்கு செல்ல காத்திருந்த பயணிகள் பெரும் தவிப் புக்குள்ளாகினர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேருந்து நிலையமாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு கன்னியா குமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோவை, சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வடக்கில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி, திருப்பத் தூர், வாணியம்பாடி, வேலூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய பேருந்து நிலைய மாக இருந்து வருகிறது. இரவு முழு வதும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதால் எப்போதும் பேருந்து நிலை யத்தில் பயணிகளின் கூட்டம் இருந்து வரும். இதனால் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயமின்றி இருக்கவும், பேருந்துகள் வந்து செல்லவும் பேருந்து நிலையத் தின் நடுவே உயர்மின் கோபுரம் அமைக் கப்பட்டு உள்ளது. இந்த கோபுரத்தின் உச்சியில் 4 திசையிலும் வெளிச்சம் தெரியும் வகை யில் மெர்குரி மின்விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. தற்போது இந்த மின் விளக்குகளில் 3 விளக்குகள் மட்டுமே எரிகிறது. மற்ற விளக்குகள் பழுதாகி  உள்ளதால் பாதி பேருந்து நிலையம் இருட்டில் மூழ்கியுள்ளது. இந்நிலை யில், தீபாவளி பண்டிகை முடிந்து திங்க ளன்று பயணிகளின் கூட்டம் குவிந்த தால் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. பாதி பேருந்து நிலையம் இருளில் மூழ்கியதால், அங்கு பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக் கள் சரிவர காட்சி படங்கள் தெரியாத தால் குற்ற சம்பவத்தை தடுக்க போலீ சார் திணறி வருகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை கருதி உயர்மின் கோபு ரத்தை உடனடியாக சீர் செய்ய மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியு றுத்தியுள்ளனர்.