districts

img

ரூ.2.92 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்

அவிநாசி, ஏப்.15 - அவிநாசி பகுதியில் ரூ.2 கோடியே 92 லட்சம் மதிப்பில்  வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா வெள்ளியன்று தொடங்கி வைத்தார். திருமுருகன்பூண்டி 22ஆவது வார்டில் ரூ.12 லட்சம் மதிப் பில் அங்கன்வாடி அமைக்கும் பணி, அவிநாசி பழைய பேருந்து நிலையம் பின்புறம் ரூ.25 லட்சம் மதிப்பில் தார்  சாலை அமைக்கும் பணி, தத்தனூர் ஊராட்சி கோபி நெடுஞ் சாலை கூட்டப்பள்ளியில் ரூ.1.75 கோடியில் ரவுண்டான அமைக்கும் பணி, ரூ.38 லட்சம் மதிப்பில் நடுவச்சேரி, ஈரோடு,  சக்தி இணப்பு சாலை அமைக்கும் பணி, பொங்கேகவுண்டன்பு தூர் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கி ரீட் சாலை அமைக்கும் பணி, சாவக்கட்டுப்பாளையத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்  திறப்பு, சுள்ளிப்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக் கப்பட்ட கான்கிரீட் சாலை திறப்பு என மொத்தம் ரூ.2 கோடியே  92 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை நாடாளுமன்ற  உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார். திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, தத்தனூர் ஊராட்சிமன்றத் தலைவர் விஜயகுமார், பொறுப்பாளர்கள் சர வணன் நம்பி, பால்ராஜ், பழனிசாமி, சிவபிரகாஷ், திராவிடன்  வசந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.