திருப்பூர், நவ. 3 - திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் நடை பெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட நிதியில் கட் டப்பட்ட சீராணம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி சுற்றுச்சு வர் பணிகளையும், பாரதிபுரத்தில் புதிய சாலை பணிகள், எம் ஜிஆர் நகரில் ரோடு பணிகளையும், பிஎம்ஒய் வீடுகள் கட்டும் திட்ட பணிகளையும் ஆட்சியர் எஸ்.வினீத் ஆய்வு செய் தார். ஆட்சியருடன், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர், ஒன்றிய மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.