சிஐடியு ஆர்ப்பாட்டம் ஈரோடு, மே 8- மக்களுக்கான மருந்து கொள் கையை உருவாக்க வலியுறுத்தி சிஐ டியு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்ப னைப் பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். மருந்துகள் மற்றும் மருத்துவ உப கரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது. மருந்து விலை நிர்ணயத்தில் ஒன்றிய அரசின் கொள்கையை மாற்ற வேண்டும். மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்குத் துணை போகக்கூடாது. பொதுத்துறை மருந்து நிறுவனங்களை புனர மைத்து முழுமையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் கிளை தலை வர் வெ.சுரேஷ்பாபு தலைமை வகித் தார். அகில இந்திய சம்மேளன தலைவர் ஆர்.ரமேஷ்சுந்தர் சிறப்புரையாற்றி னார். இதில் சிஐடியு மாவட்ட செயலா ளர் எச்.ஸ்ரீராம், டிஎன்எம்எஸ்ஆர்ஏ மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.நாரா யணசாமி, மாநிலக்குழு உறுப்பினர் கே. கே.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை செயலாளர் மு.சங்கரன் நன்றி கூறி னார்.