வாசிக்கலாம் வாங்க
தருமபுரி, ஆக.3- தருமபுரி முத்து இல்லத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர் சங்கத்தின் சார்பில் வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக வாசிக் கலாம் வாங்க நிகழ்ச்சிக்கு முனைவர் கணபதி தலைமை ஏற்றார். தமுஎகச மாவட்டச் செயலாளர் ம.சிங்காரவேல், ஆசிரியர் கூத்தப்பாடி மா.பழனி, பேராசிரியர் கு.சிவப்பிர காசம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், சிங்கிஸ் அயித்மாத்தொவ் என்ற நூல் அறிமுகம் செய்து மா.ஜெயலட்சுமி உரையாற்றினார். இந் நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர், நிறைவாக, செல்வி சாரா நன்றி கூறி னார்.
தாட்கோ மூலம் தொழிற்பயிற்சி
ஈரோடு, ஆக. 3- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படை யிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு. கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம் பந்தப்பட்ட பயிற்சியான எஸ்ஏபி, டேட்டா அனலிடிக்ஸ், ஆர்டிஃபீசியல் இன்டெலிஜன்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிடல் மார்க்கெட்டிங் மற்றும் அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியான மல்டிமீடியா & ஆம்ப், அனிமேசன், 2டி, 3டி மற்றும் டேலி ஈஆர்பி 9 போன்ற பயிற்சிகளை அளிக்கப்படு கிறது. முன்னணி பயிற்சி நிறுவனங்கள் முலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப காலமாதாந்திர ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெற லாம். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணை யதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, 6 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியிலும், 0424-2259453 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
ஈரோடு, ஆக.3- கோபி அருகே 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப் பட்டனர். இதேபோன்று, 12 ஆம் வகுப்பு மட்டும் படித்த மருந்து கடைக்காரரும் பிடிபட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எர்ரம் பாளையத்தில் ஓமியோபதி படித்துவிட்டு தந்தை, மகன் இருவரும், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக ஈரோடு மருத்துவ சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா வுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பிகா மற்றும் அதிகாரிகள், போலீசார் கொண்ட குழுவினர் செவ்வாயன்று எர்ரம்பாளையத்தில் உள்ள வெங்கடேஸ்வரன் (47) என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் ஆங்கில மருந்துகள், ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள் உள்பட சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் இருந்தன. மேலும், ஓமியோபதி படித்துவிட்டு மகனுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததாக தெரி கிறது. இதையடுத்து வெங்கடேஸ்வரன் மற்றும் அவரு டைய மகன் ஜோதி பிரசாத் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் இருந்து ஆங்கில மருந்துகள், உப கரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், கோபி காசிபாளையத்தில் உள்ள மருந்து கடையில் அதிகாரிகள் குழுவினர் சோதனை செய்தனர். அப் போது மருந்து கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (47) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மருந்தாளுனர் படிப்பு படிக்கவில்லை என்பதும், பிளஸ்-2 முடித்துவிட்டு மருந்துக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மருந்துக் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு?
கோவை, ஆக.3- தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலை யில், மீண்டும் கோவை குற்றாலம் திறக்கப் பட உள்ளதாக தெரிகிறது. மேற்குமலைத்தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் கோவை மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. கடந்த சில தினங்களாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாககோவை குற்றாலத்தில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டது. இதனிடையே கோவை குற்றாலத் தில் சிறு சிறு பராமரிப்பு பணிகள் நடை பெற்றன. தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் மீண்டும் கோவை குற் றாலம் திறக்க வாய்ப்புள்ளது. எனினும் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, வியாழனன்று கோவை குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க தடை நீடிப்பதால் சின்னாறு பகுதியில் குடும் பத்துடன் குளித்துவிட்டு திரும்பி சென் றனர்.
வத்தல்மலை, ஒகேனக்கல்லில் மேம்பாட்டு பணி
அமைச்சர் ஆய்வு
தருமபுரி, ஆக.3- தருமபுரி மாவட்டம் வத்தல் மலை, ஒகே னக்கல்லில் நடைபெற்றுவரும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்று லாத்தலத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து காவிரி ஆற்றின் அழகை கண்டுகளிக்கின் றனர். மேலும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத் திற்கு வரும் மக்கள் நீர்வீழ்ச்சியை மட்டும் கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில், பாலம், கண்காணிப்பு கோபுரம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை ரூ.17.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் பணி கள் நடைபெற்று வருகிறது. அதே போல், தருமபுரி அடுத்த வத்தல் மலையில் ரூ.2.23 கோடி மதிப்பில் பயர் கேம்ப்பிங், தங்கும் விடுதி, குடும்பத்தின ருடன் சேர்ந்து உணவு அருந்தும் கூடம், சாகச சுற்றுலா தலத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளையும் தமிழ்நாடு சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை தர மாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளிடம் அறிவுறுத் தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சாந்தி, சுற்றுலா துறை இயக்குநர் சந்திப் நந்தூரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கதி ரேசன், கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்டச் செய லாளர் முனைவர் பழனியப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் அழிப்பு
திருப்பூர், ஆக. 3 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாட்சியர் அலுவல கத்தில் இருந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங் கள் மற்றும் பல்வேறு ஆவண கோப்புகள் குப்பையில் கொட் டப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டு, எரிக்கப்பட்ட மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த அவலநிலைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்வது டன் தவறு செய்த அனைவரின் மீதும் மிகக்கடுமையான நட வடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசா யிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் இரா.சதீஷ்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்லடம் வட்டாட் சியர் அலுவலகத்தில் 2019ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை உள்ள வட்டாட்சியர் அலுவலக ஆவணங்கள், தகவல் அறியும் உரிமை சட்ட மனு மற்றும் பதில் மனு என அனைத்து ஆவணங்களும் இருக்கிறதா அல்லது காணாமல் போய் விட்டதா என்று பொதுமக்கள் பொது ஆய்விற்கு அனுமதிக்க வேண்டும்.இப்பிரச்சனையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் என ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக சதிஷ் குமார் கூறியுள்ளார்.
தாராபுரம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தல்
திருப்பூர், ஆக.3- தாராபுரம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய டிப் பர் லாரியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் த.கிருஸ்துராஜ் உத்தரவின் பேரில் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ. செந்தில்குமார் தாராபுரம் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் செம்மண் அள்ளிக்கொண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு கனரக வாகனங்கள் வந்தது. அதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பிடித்து ஆய்வு செய் தனர். அப்போது இரண்டு டாரஸ் லாரியில் அனுமதி யின்றி செம்மண் கடத்தியது தெரியவந்து. மேலும் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது. அதிக பாரங்களை ஏற்றி சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட புகார்கள் பெறப்பட்ட அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. சிறை பிடிக்கப்பட்ட லாரிகள் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகா ரிகளை கண்டதும் லாரி ஓட்டுநர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட் டது என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித் தனர்.
மூதாட்டி செயின் பறிப்பு: மூவர் கைது
திருப்பூர், ஆக. 3 - ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையம் மால வன் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. (70). இவர் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி பகல் 12 மணிக்கு சரஸ்வதி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் மூன்று பேர் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற னர். இது குறித்து சரஸ்வதியின் மகன் கொடுத்த புகாரின்பே ரில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புல னாய்வு செய்த ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட தனிப்படை யினர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு அங்கிருந்த தடயங் களை சேகரித்தனர். அவற்றைக் கொண்டு ஆய்வு செய்து, குற்றத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்தனர். இதில் கொடியம்பாளையத்தைச் சேர்ந்த பொ.அன்பரசு மற்றும் அவனது கூட்டாளிகளான ஈரோடு பெ.அறிவழகன் மற் றும் பொ.கண்ணன் என்று கண்டுபிடித்தனர். கடந்த செவ்வா யன்று இவர்களைக் கைது செய்தனர். அவர்கள் திருடிய 5 பவுன் தங்கநகையை பெருமாநல்லூர் முத்தூட் பின்கார்ப் அடகு கடையில் அடகு வைத்திருப்பதை தெரிவித்தனர். பின்பு பெருமாநல்லூர் முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் இருந்து 5 பவுன் நகையை மீட்டு மூவரையும் ஊத்துக்குளி நீதிமன்றத் தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான ஈரோடு வெள்ளோடை சேர்ந்த செ.பாபுவை தேடி வருகின்றனர்.
புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களை மகளிர் உரிமைத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை
திருப்பூர், ஆக. 3 – தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தில் புலம்பெ யர்ந்து இங்கு வந்து வசிக்கும் பெண் தொழிலாளர்களையும் சேர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரி யுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட் டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அர ணாக திமுக அரசு உள்ளது. திருப்பூர் போன்ற தொழில் நக ரங்களில் பனியன் உள்பட பல தொழில்களில் புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்ற னர். இந்த பெண் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிக வும் பின்தங்கி உள்ளனர். அதேபோல் உள்ளாட்சி அமைப்புக ளில் துப்புரவுப் பணியில் ஒப்பந்த முறையில் வேலை செய்து வரும் பெண் தொழிலாளர்களில் பெரும் பகுதி புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் மிக மிக குறைந்த கூலியைப் பெறுகின்றனர். இவ்வாறு சொற்ப ஊதியத்தில் மிகத்துயரமான சூழ்நிலை யில் வேலை செய்து வாழ்ந்து வரும் புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆக.5 மின்தடை
திருப்பூர், ஆக.3- பல்லடம், காளிவேலம் பட்டி துணை மின் நிலையத் தில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (சனிக்கி ழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க் கண்டப் பகுதிகளில் மின் விநி யோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியா ளர் சி.பழனிசாமி தெரிவித் துள்ளார். மின்தடை ஏற்படும் பகுதி கள்: செம்மிபாளையம், சுக் கம்பாளையம், காளிவேலம் பட்டி, அண்ணா நகர், ஊஞ்ச பாளையம், ராசாகவுண்டம் பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகர், சின் னியம்பாளையம், ரங்கசமுத் திரம் மற்றும் பனிக்கம்பட்டி.
57ஆவது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கவுன்சிலர் கோரிக்கை
திருப்பூர், ஆக. 3 - திருப்பூர் மாநகராட்சி 57ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாமன்ற உறுப்பினர் கவிதா நேதாஜி கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமாரிடம் கவிதா நேதாஜி கண்ணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 57ஆவது வார்டில் உள்ள வள்ளலார் நகர் 5, 6ஆவது வீதிகள், திருக்குமரன் நகரில் உள்ள 1, 2, 3ஆவது வீதிகளின் நீளம் வெறும் 140 மீட்டர் முதல் 180 மீட்டர் வரை மட்டுமே உள்ளன. பிரதான சாலையில் கழிவுநீர் சென்று சேர்வதற்கு டிஸ்போசல் பாயிண்ட் வசதி இருக்கிறது. ஆனால் மேற்கண்ட வீதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. இதனால் இந்த தெருக்களில் கழிவுநீர் வெளி யேறுவதற்கு வழி இல்லாமல் தெருக்களில் சென்று நோய் தொற்று ஏற்படுவது மட்டு மின்றி பொது மக்களிடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சனை யும் உருவாகி காவல் நிலையம் வரை செல்லக்கூடிய சூழல் ஏற்படுகிறது. எனவே மேயர் தினேஷ்குமார் இப்பகுதி களை நேரில் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் ஒரு பக்கக் கழிவுநீர் கால் வாய் மட்டுமாவது அமைத்துத் தரும்படி அப் பகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்வ தாக கவிதா நேதாஜி கண்ணன் கூறியிருக் கிறார்.
உள்ளக புகார்குழு அமைக்காவிட்டால் அபராதம்
கோவை, ஆக.3- பெண்கள் பணியாற்றும் இடங்களில் கட் டாயமாக புகார் குழு அமைக்கப்பட வேண் டும் எனவும், இல்லையென்றால் அந்நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்பிற்காக பலதிட்டங் கள் மற்றும் சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் தடுப் பதற்காக, பணிபுரியும் பெண்கள் எதிர்கொள் ளும் பாலியல் வன்முறை தடைசட்டம் 2013 ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டது. இச்சட் டத்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள் ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்ளக புகார் குழு, அனைத்து அரசுதுறை கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். 10 பெண்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து இடங்களிலும், தலைமை அலுவ லகங்களில் (Head of the Department) கட்டா யம் (Internal complaint committee) உள் ளக புகார்குழு அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு உள்ளக புகார் குழு அமைக்கப் படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்பு றுத்தல் தடைச்சட்டம் - 2013ன்படி, ரூ.50 ஆயி ரம் அபராதம் விதிக்கப்படும், என தெரிவிக் கப்பட்டுள்ளது.
வாலிபரை கடத்த முயன்ற 4 பேர் கைது
கோவை, ஆக.3- முன்விரோதம் காரணமாக வாலிபரை காரில் கடத்த திட்டமிட்ட 4 பேர் கொண்ட கும் பலை போலீசார் கைது செய்தனர். கோவை, செல்வபுரம் காவல் துறையி னர் செவ்வாயன்று ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது பேரூர் சாலை, அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் அருகே முகக் கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் அங்கும், இங்கும் சுற்றி கொண்டிருந்தனர். இதனைப்பார்த்த போலீசார் அவர்களை சந்தேகத்தின்பேரில் விசாரிக்க முயன்றனர். ஆனால், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதில் 4 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கும்பல் முன் விரோதம் மற்றும் பணத்தகராறு காரணமாக கரும்புக்கடையைச் சேர்ந்த அஜ்மல் கான் என் பவரை காரில் கடத்தி சென்று தாக்க திட்ட மிட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீ சார் வாலிபரை காரில் கடத்த நோட்டமிட்டு காத்திருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (27), விவேக் (29), நவீன் குமார் (28), தென்பாண்டி (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதன்பின் கைது செய்யப் பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.
கால்நடை உணவியல் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு
கோவை, ஆக.3- பொள்ளாச்சி அருகே கால்நடை உணவியல் தொழில்நுட்பங்கள் தொடர் பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. உடுமலைபேட்டை கால்நடை மருத் துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தின் உணவியல் துறையின் சார்பில், கறவை மாடுகளின் உற்பத்தியை அதிக ரிக்க தனுவாஸ் கால்நடை உணவியல் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்பு ணர்வு முகாம் கோவை மாவட்டம், பொள் ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் கிராமத்தில் நடைபெற்றது. இம்முகா மில் உடுமலைபேட்டை கால்நடை மருத் துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யம் விவசாயிகளுக்கு ஆற்றிவரும் சேவை கள் பற்றி விளக்கபட்டது. பெதப்பம்பட் டியில் இயங்கி வரும் கால்நடை மருத்து வமனை வளாகத்தில் உள்ள நவீன கரு விகள் மற்றும் கால்நடைகளுக்கு வழங் கப்படும் உயர் ரக சிகிச்சை குறித்தும், செல்லப் பிராணிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவின் முக்கியத்துவம் மற் றும் செயல்படும் பல்வேறு வசதிகள் குறித்து கல்லூரி முதல்வர் பா.குமர வேல் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் இணைபேராசிரியர் சி.கதிர்வேலன், சின்ன நெகமம் ஊராட்சி மன்ற தலைவர் இ.செந்தில்பிரபு, கால் நடை உதவி மருத்துவர் சௌந்தர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார். 50 கறவை மாடு பண் ணையாளர்கள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்த னர்.
ஆடுகள் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு
நாமக்கல், ஆக.3- ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில வந்து ஆடுகளை திருடிச்செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அரியா கவுண்டம்பட்டி பகுதியில் அடிக்கடி ஆடுகள் திருடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஜூலை 27 ஆம் தேதியன்று அரியாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரின் ஆட்டு கொட்டகையிலிருந்து பெரிய ஆடு ஒன்றை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திருடி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள் ளது. ஏற்கனவே இவருடைய ஆட்டு கொட்டகையில், இரண்டு ஆடுகள் திருடு போனதாக கூறப்படும் நிலையில் இப்பகுதி யில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் திருப்போய் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சி களின் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை காவல் நிலை யத்தில் சக்திவேல் புகார் அளித்துள்ள நிலையில், ஆடு திருடுபவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடு பட்டுள்ளனர்.
போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்தின் படியில் பயணிக்கும் மாணவர்கள்
உதகை, ஆக.3- கோத்தகிரி பகுதியில் போதிய அரசு பேருந்துகள் இயக் கப்படாததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உயிரை பணயம் வைத்து பேருந்து படியில் பயணம் செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் உதகை, குன்னூர், கோத் தகிரி மற்றும் கூடலூர் ஆகிய பணிமனைகள் இயங்கி வரு கின்றன. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலி ருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களின் கிராமங்களுக்கு செல்ல போதிய அரசு பேருந்துங்கள் இல்லாததால், கிடைக்கும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. இதனால் கோத்தகிரி - குன்னூர் மற்றும் கோத்த கிரி - உதகை செல்லும் பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண் டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, மலை பகுதி சாலைகளில் பேருந்து செல்வதால் பேருந்தின் படிகட்டுகள் சாலையை தொட்டவாரே செல்வதால், பெரும் விபத்து ஏற்ப டும் அபாயம் நிலவுகிறது. எனவே, விபத்து ஏற்பட்டு உயிரி ழப்பு ஏற்படும் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடு தல் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சள் ஏலம்
நாமக்கல், ஆக.3- நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்சி எம்எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகு திகளைச் சேர்ந்த விவசாயி கள், 1550 மூட்டை மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்தி ருந்தனர். இதில் விரலி ரகம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8 ஆயிரத்து 109 முதல் ரூ.15 ஆயிரத்து 802 வரையிலும், உருண்டை ரகம் ரூ.6 ஆயி ரத்து 702 முதல் ரூ.13 ஆயி ரத்து 512 வரையிலும், பனங் காலி ரகம் ரூ.4 ஆயிரத்து 99 முதல் ரூ.16 ஆயிரத்து 369 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 12 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.