districts

img

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோர் பராமரிப்பு மையம்

திருப்பூர், பிப். 18 - தமிழ்நாட்டில் முதன்முதலாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் ஆதரவற்ற வர்கள் பராமரிப்பு மையம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 40 முதியவர்கள்  மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் கள். இதில் 25 பேர் ஆண்கள், 15 பேர்  பெண்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிராதரவான நிலை யில், தெருவோரங்களில் வசிப்பவர் களாகவும், விபத்துகளில் சிக்கி ஆம் புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு முதலுதவி அளித்து உறவினர்கள் இருக்கும் பட் சத்தில் அவர்களுடன் அனுப்பி வைக் கின்றனர். உறவினர்கள் இல்லாத வர்களை சிகிச்சை அளித்து உடல் நிலை சீரான உடன் முதியோர் இல் லத்தில் சேர்க்கின்றனர். இது குறித்து சமூக நல துறையின்  கீழ் உள்ள முதியோர் உதவி மையம் மாவட்ட களப்பொறுப்பு அலுவலர் கூறுகையில், தமிழ்நாட்டில் திருப்பூ ரில்தான் முதன் முதலாக இது ஆரம் பிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்  கல்லூரி நிர்வாகம் தரப்பில் இங் குள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள்  தரப்படுகிறது. மேலும் இவர்களுக்கு தேவைப்படும் சோப்பு, எண்ணெய்  போன்ற பொருட்கள் ஸ்பான்சர்க ளிடம் இருந்து நிதி பெற்று வழங்கப்ப டுகிறது என்று கூறினார். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும்  50-க்கும் மேற்பட்ட முதியவர்களை தெருவோரங்களில் இருந்து மீட்டு  முதலுதவி அளித்து முதியோர் இல் லங்களில் சேர்த்துள்ளதாகவும், மாதத்தில் இரு முறை அந்த முதி யோர் இல்லங்களுக்கு நேரடியா கவோ அல்லது தொலைபேசி மூல மாக தொடர்பு கொண்டு முதியவர் கள் குறித்து அறியப்படும் என்றார்.