districts

img

தடம் புரண்ட உதகை ரயில் வளர்ப்பு எருமை பலி

உதகை,பிப். 26- மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த மலைரயில் பெர்ன்ஹில் பகுதியில் வரும் போது எருமை ஒன்று இருப்புபாதையை கடந்த போது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.  மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில்  திங்களன்று காலை 220 பயணிகளுடன் உதகை நோக்கி  வந்து கொண்டிருந்தது. அப்போது உதகை மலை ரயில்  நிலையம் முன்பு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  பெர்ன்ஹில் பகுதியில் மழைறையில் வந்து கொண்டி ருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்டவாளம் குறுக்கே  தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமை வந்த தால் மலை ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் மலைரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. இந்த விபத்தில் வளர்ப்பு எருமை பரிதா பமாக உயிரிழந்தது. இந்த விபத்தில் மலை ரயிலில் பயணம் செய்த பயணிக ளுக்கு எவ்வித காயமின்றி உயிர்தப்பினர். பின்பு தகவல்  அறிந்து வந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே  காவல்துறையினர் 220 பணிகளையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.