திருப்பூர், அக். 13 - ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணை யத்தின் (எஸ்.எஸ்.சி) தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் திருப்பூரில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப் பூர் மாவட்ட குழு சார்பில் புதிய பேருந்து நிலையம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதி ரில் வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணை யத்தின் தேர்வுகளை தமிழில் நடத்த வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டப் பொருளாளர் கு.பாலமுரளி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சந் தோஷ், விவேக், உமாசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள் நிறை வுரை ஆற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ராம்கி, பால சுப்பிரமணியம், பிரவீன் மற்றும் இடை கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.