ஆன்லைன் அபராத முறையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆட்டோ தொழிலாளர் சங்கங்கள் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார், தலைவர் மகாதேவன், அண்ணா தொழிற்சங்கம் சுந்தர பாண்டியன், ஏஐடியுசி லோகு, எஸ்டிபிஐ நிஜாமுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.