திருப்பூர், நவ. 18 – திருப்பூர் மாநகராட்சி எம்எஸ் நகர் அருகே அம்பேத்கார் நகர் சமுதாய நலக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். எம்.எஸ் நகர் அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம், பால்வாடி மற்றும் பொதுக்கழிப்பிடம் ஆகியவற் றைப் சீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அம்பேத்கார் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநகர செய லாளர் விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கையை ஆத ரித்துப் பேசினர். வாலிபர் சங்க நிர்வாகிகள், இப்பகுதி பொது மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இக்கோரிக்கை குறித்து கையெழுத்து இயக் கத்தில் பெறப்பட்ட மனுக்களை, மண்டல அலுவலகத்தில் வாலிபர் சங்கத்தின் மாநகர செயலாளர் விவேக் தலைமை யில் மாநகர குழு உறுப்பினர்கள் நவீன் குமார், சந்துரு, பிரவீன் குமார் அம்பேத்கர் நகர் கிளை பொருளாளர் ரங்கசாமி, முன் னாள் வாலிபர் சங்கத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் இரண்டாம் மண்டல தலைவரிடம் கொடுத்தனர்.