அவிநாசி, ஆக.10– ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அவிநாசி யில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் அனைத்து நிலை பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செய லர்களுக்கு சிறப்புநிலை, தேர்வுநிலை, வரை யறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனே வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கணினி உதவியா ளர்கள், திட்டத்திற்கு தனி ஊழியர்கள் கட்ட மைப்பை ஏற்படுத்த வேண்டும் மற்றும் எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளர் அனை வரையும் பணிவரன் முறைப்படுத்தக் வேண் டும், கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங் களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமைப் பின் வட்டச்செயலாளர் பரமேஸ்வரன் தலை மையில் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்குமார் முன்னிலையிலும், கோரிக்கைகளை விளக்கி அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ் உரையாற்றினார்.