அரசு பேருந்தின் பயண நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை
தருமபுரி, ஆக.6- பென்னாகரத்திலிருந்து எர்ரப்பட்டி வழியாக நாகாவதி அணை பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தின் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பென்னாகரம் போக்குவரத்து கிளை மேலாளரிடம் பெற்றோர்கள் திங்களன்று அளித்த மனுவில், பென்னாகரம் அருகே நாகாவதி அணை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அரகாசன அள்ளி, எர்ரப்பட்டி, ஆர்.ஆர்.அள்ளி, காளிநாயக்கனூர், கண்ணம்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து 200க்கும் மேற் பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தினசரி சின்னம்பள்ளியில் உள்ள அரசு மாதிரிப்பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று வரு கின்றனர். நாகாவதி அணைக்கு பென்னாகரம் கிளை பணி மனையில் இருந்து தினசரி 26ஏ அரசு பேருந்து இயக்கப் படுகிறது. இந்த பேருந்து தினசரி காலை 6 மணிக்கு பென்னா கரம் வருகிறது. அங்கிருந்து எர்ரப்பட்டி வழியாக நாகாவதி அணை பகுதிக்கு காலை 6.30 மணிக்கு வருகிறது. அதன்பிறகு பணிமனை சென்று விடுகிறது. பின்னர் மாலை வேளை யில் பென்னாகரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப் படும் இந்த பேருந்து, சின்னம்பள்ளி அரசு மாதி ரிப்பள்ளிக்கு மாலை 6 மணிக்கு வருகிறது. அங்கிருந்து எர்ரப்பட்டி, நாகாவதி அணை பகுதிக்கு இரவு 7 மணிக் குச் செல்கிறது. தினசரி வெகு சீக்கிரம் காலை பள்ளி நேரத்துக்கு முன்ன தாக 6.30 மணியளவில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் பேருந்தை தவறவிடக்கூடாது என்பதற்காக மாணவர்கள் காலை வேளை உணவை சரிவர உண்ணா மல் பேருந்தைப் பிடிக்க ஓடும் நிலை உள்ளது. பேருந்துக் காக காலையில் சீக்கிரமே காத்திருக்கும் மாணவர்கள் இரவு வெகு நேரம் கழித்து 7 மணியளவில்தான் வீடு திரும்புகின்ற னர். பேருந்தை பிடிப்பதற்கு நாள் முழுவதும் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால், மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, பென்னாகரம் பணி மனையில் இருந்து அரசு நகரப் பேருந்தை காலையில் நாகாவதி அணை பகுதிக்கு 8 மணி அளவிலும், மாலை யில் 4.30 மணி அளவிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் ஆணவப்படுகொலை: ஆக.12இல் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஆக.6- தருமபுரியில் நடைபெற்ற ஆண வப்படுகொலையை கண்டித்து, ஆக.12 ஆம் தேதியன்று ஆர்ப்பாட் டம் நடைபெறும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள் ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தரும புரி மாவட்டத் தலைவர் பி.ஜெயரா மன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், தருமபுரியில் தனியார் ஓட்டல் ஊழியர் முகமது ஆசிப்பின் ஆண வப்படுகொலை செய்யப்பட்டுள் ளார். ஊதியம் ஈட்டும் முகமது ஆசிப்பை படுகொலை செய்த தால், அவரை இழந்து வாடும் அவ ரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினர்க ளின் பாதுகாப்பை உறுதிபடுத்தி, ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சாதியத்தை தகர்த்து, மனித நேயத்தை வளர்க்கும் வகை யிலும், சாதிய ரீதியாக, சமூக ரீதி யாக, பொருளாதார ரீதியாக நடை பெறுகின்ற இதுபோன்ற ஆணவப் படுகொலைகள் நடைபெறா வண் ணமும், அன்பு கலந்த காதல் திரும ணங்களை சமூகம் ஏற்றுக் கொள் ளும் வகையிலும் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் தொடர் விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடத்த வேண் டும். இச்சம்பவங்களை கண்டிக் கும் வகையிலும், வரும் காலத்தில் இதுபோல் நடக்காத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று தருமபுரியில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவு டன் இணைந்து கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு மக்கள் ஆதரவுதர வேண் டும். மேலும், சாதியத்தை தகர்த்து, மனித நேயத்தை வளர்த்திட மக்க ளிடம் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் கருத்தியல்களை உரு வாக்கிடும் வகையில், ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று பல்வேறு தலைப் புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தண்ணியில்லாவாவியில் தண்ணீர் இல்லை
ஈரோடு, ஆக. 6- கொடுமுடி அருகே உள்ள தண்ணியில் லாவாவியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இச்சிபாளையம் கிரா மத்தில் தண்ணியில்லாவாவி என்ற கிராமம் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்பட்டது. 280 வீடுகள் கொண்ட இக்குடியிருப்பில் 150 குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஆழ்து ளைக் கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்யப்பட்டது. ஆனால், மோட்டார் பழுத டைந்துள்ளதால் தண்ணீர் கிடைப்ப தில்லை எனவே, இங்கு காவிரி குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும், குடி யிருப்புவாசிகள் வேலைக்குச் செல்வதற் கும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்க்கும் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மனு அளித்தனர்.
கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகை, ஆக. 6- உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்.பஜார் பகுதியில் திங்களன்று ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அவ்வழியே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு, வனத் துறை யினர் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் வனத் துறையினர் சுமார் 1 மணி நேரத்துக்கும்மேலாக சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்து சரி செய்தனர்.
எடப்பாடி காவல் நிலையத்தில் குண்டு வீச்சு!
சேலம், ஆக.6- எடப்பாடி காவல் நிலையத்தில் செவ்வாயன்று குண்டு வீசப்பட்ட சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகே, ஜலகண்டா புரம் பிரதான சாலையில், எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகி றது. இந்த காவல் நிலையத்தில் செவ்வா யன்று அதிகாலை திடீரென அடுத்த டுத்து 2 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணி யில் இருந்த காவலர், அதிர்ச்சிய டைந்து அங்கு சென்று பார்த்தபோது, அந்த குண்டுகள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படு கிறது. உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த காவலர் வெளியே வந்து பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அருண் கபிலன், சங்ககிரி துணை கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்ட காவல் அதிகாரிகள் எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசா ரணை மேற்கொண்டனர். அதிகாலை நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் கள் எடப்பாடி காவல் நிலையத்திற் குள் குண்டுகள் வீசிய சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல் துறையினர், குண்டு களை வீசிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அண்மையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப் பாடி காவல் நிலையத்தில் வழக்குப்ப திவு செய்யப்பட்டு இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரே னும் இதுபோன்ற குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத் திலும் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாணவர்கள் நிதி உதவி
திருப்பூர், ஆக.6- கேரள மாநிலம், வயநாட்டில் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் ரூ.17,505 நிதி வழங்கி உள்ளனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்களில் வயநாடு பேரிடர் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிவாரண நிதி வசூல் நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவர்கள், பேரா சிரியர்கள் நிதி அளித்தனர். வசூலான மொத்த தொகை ரூ.17, 505-ஐ மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார் ஆகியோரிடம் கல்லூரி கிளைத் தலைவர் விமல்ராஜ், செயலாளர் கண்ணன் ஆகியோர் ஒப்படைத்த னர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிவாரண நிதி வசூலில் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் சுஜிதா, நிஷா, முகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலுவை ரூ.150 கோடியை விடுவிக்க வலியுறுத்தல்
உடுமலை, ஆக. 6- கொப்பரை தேங்காய்களுக்கு மூன்று மாதங்களாக பணம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதை ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மிகக்கடுமையான சிக்கலில் இருக்கிறது. விவசாயிகளுக்கு கொப்பரை தேங் காய்க்கு ரூ. 150 மட்டுமே கட்டுப்படியான விலை ஆகும், ஆனால் அரசு கொடுப்பது வெறும் ரூ.111.60 பைசா மட்டுமே. மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கடந்த மூன்று மாதங்க ளுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் விவசாயிக ளிடம் இருந்து ரூ.150 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்துள்ளது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு பணம் தரவில்லை. உடனடியாக நிலுவை பணத்தை வழங்காவிட் டால் சென்னை, எழும்பூரில் உள்ள நாபெட் அலுவல கத்தின் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
திருப்பூர், ஆக.6- திருப்பூர் மங்கலம் சாலையில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1100 கிலோ குட்கா புகையிலைப் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். திருப்பூர் மங்கலம் பகுதியில் போலீசார் திங்களன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப் போது சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் மூட்டை மூட்டையாக தமிழ் நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாக னத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை மங்க லம் அருகே உள்ள குடோனுக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மங்கலத்தைச் சேர்ந்த பக்ருதீன்(47), அப்துல் ரஹீம்(43), பொல்லிகாளிபாளையத்தைச் சேர்ந்த முத் துகிருஷ்ணன் (40) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த னர். மேலும், வாகனத்தில் இருந்த 1100 கிலோ குட்கா புகை யிலைப் பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய அழைப்பு
திருப்பூர், ஆக.6 - தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட் டிகள் 2024-ல் பங்கேற்க https://sdat.tn.gov.in என்ற இணை யதளத்தில் முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற் றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது. இந்த ஆண்டு தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கு மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட் டுள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 25 மாலை 6 மணி. “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற என்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறை பரிந்துரைக்கும் விதைகளை மட்டும் விற்க தனியார் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட கோரிக்கை
உடுமலை, ஆக. 6- வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்யும் மருந்து மற்றும் விதைகளை மட்டுமே விவசாயிக ளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தனியார் விற்பனை கடைகளுக்கு உத்தரவிடுமாறு விவசாயிகள் கோரி யுள்ளனர். தமிழ்நாடு அரசு வேளாண் துறை யின் மூலம் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் விதை, உரம் உள்ளிட்ட வேளாண் பொருட் களை மானிய விலையில் வழங்குகி றது. உடுமலை மற்றும் மடத்துக்கு ளம் பகுதியில் தென்மேற்கு பருவம ழையால் அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணைகளில் நீர் வரத்து சீராக உள்ளது. மேலும், இப்பகுதியின் நிலத் தடி நீர் மட்டமும் ஓரளவு உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் காய்கறி பயிர்கள், மானாவாரியாக சிறுதானி யங்களை பயிர் செய்ய உள்ளார்கள். ஏற்கனவே பல தனியார் நிறுவனங் களின் விதைகளை விதைத்து சரி யான விளைச்சல் இல்லாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தனியார் விதை நிறுவனங்களின் விற்பனை பிர திநிதிகள் விவசாயம் செய்யும் இடங் களுக்கே சென்று தங்கள் நிறுவனத் தின் விதை, மருந்துகளை பயன்படுத் தும்படி விளம்பரம் செய்து வருகின்ற னர். இது குறித்து விவசாயிகள் தெரி விக்கையில், உடுமலை மற்றும் மடத் துக்குளம் பகுதியில் உள்ள வேளாண் துறை அதிகாரிகளின் செயல்பாடு போதுமான அளவு இல்லை. மானிய திட்டங்கள் அதிகாரிகளுக்கு பிடித்த நபர்களுக்கு மட்டும் தரப்படுகிறது. வேளாண் துறையின் மூலம் பயன் பெற்ற விவசாயிகளின் விபரங்களை அலுவலகத்தில் வெளிப்படையாக வைக்க வேண்டும். போலியான விதை மற்றும் உரங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொண்டு, விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரை செய் யும் மருந்து மற்றும் விதைகளை மட் டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தனியார் விற் பனை கடைகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், வேளாண் துறை யின் திட்டங்கள் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எளிய வகையில் மண் பரிசோதனை செய்ய வசதிகளை ஏற் படுத்த வேண்டும். விளைநிலங்களில் காலநிலைக்கு ஏற்ற வகையில் என்ன பயிர் செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும், என்றனர்.
பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
அவிநாசி, ஆக.6 அவிநாசி அருகே சிறு மிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்துறை யினர் திங்களன்று கைது செய்தனர். அவிநாசி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த முருகன் (40). இவர், தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறு மிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் காவல்து றையினர் போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
மூளைச்சாவில் இளைஞர் மரணம் உடல் உறுப்பு தானமாக வழங்கிய பெற்றோர்
கோவை, ஆக 6- சாலை விபத்தில் இளைஞர் மூளைச் சாவடைந்த நிலையில், பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தான மாக அளிக்க முன்வந்தனர். போதிய விழிப்புணர்வு இல்லாத கடைக்கோடி கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள், தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த செயல் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், காளாம்பாளை யம் அருகே செல்லப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுச்சாமி-சரஸ்வதி தம்பதியினர். இவர்களது மகன் ஸ்ரீராம். இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த சனியன்று ஸ்ரீராம் தனது நண் பர் மதனுடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற பொழுது கார் மோதி விபத்தில் சிக்கினர். இதில், மதன் உயிரி ழந்த நிலையில், ஸ்ரீராம் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்ரீராமுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இத னையடுத்து ஸ்ரீராமை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலை யில், ஸ்ரீராம் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்து ஒப்பு தல் அளித்தனர். இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் திங் களன்று மாலை ஸ்ரீராமின் உடலில் இருந்து சிறுநீரகம், கண்கள் இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட பல் வேறு உறுப்புகள் தானமாக பெறப்பட் டன. இதனைத்தொடர்ந்து ஸ்ரீராமின் உடலை செவ்வாயன்று காலை உறவினர் கள் பெற்றுக்கொண்டனர். சாலை விபத் தில் மூளைச்சாவடைந்த மகனின் உட லுறுப்புகளை, வேறு நபர்களுக்கு பயன் படட்டும் என்ற நோக்கில் எளிய கிரா மத்து பின்னணி கொண்ட தம்பதியினர் தானமாக கொடுத்த செயல் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஸ்ரீராமின் உடலுக்கு அரசு மருத்துவ மனை முதல்வர் நிர்மலா, அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் ஆட்சியரின் ஊழியர் விரோதபோக்கு
விருதுநகர் ஆட்சியரின் ஊழியர் விரோதபோக்கு தருமபுரி, ஆக.6- ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சத்தியசங்கர் என்ப வரை எவ்வித காரணமுமின்றி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பணியிலிருந்து விடுவித்தார். இவரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று, தருமபுரி மாவட்டம் முழு வதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ச.இளங்குமரன், மாவட்டத் தலைவர் இலியாஸ், மாவட்டச் செயலாளர் தருமன், மாவட்டப் பொருளாளர் வினோத்குமார், மாவட்ட துணைத்தலைவர் பிரின்ஸ் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சுருளிநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கிடுக
நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கிடுக உதகை, ஆக. 6– கிராம மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே, கன்னேரி மந்தனை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தாலுகா அலுவலகம் மற் றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மஞ்சூர் வந்து செல்கின்ற னர். உதகை அரசு போக்குவரத்து கழகம் சார்பில், உதகையி ருந்து காலை, 6:00 மணி, 10:30 மணி, மாலை, 5:30 மணிக்கு புறப்படும் அரசு பேருந்துகள் கன்னேரி மந்தனை, எடக் காடு வழியாக மஞ்சூருக்கு சென்று வந்தது. அதேபோல், காலை, 8:00 மணிக்கு பேருந்து ஒன்று பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக கன்னேரி மந்தனை கிராமத் திற்கு வந்து கொண்டிருந்தது. மேற்கண்ட நேரப்படி இயக்கப் பட்டு வந்த அனைத்து பேருந்துகளும் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு, எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.