திருப்பூர், மே 2 - அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய் ததை கண்டித்து செவ்வாயன்று மாலை திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் ஓய்வூதியர் சங்கம், பிஎஸ்என் எல் ஊழியர்கள் சங்கம், ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் ஒன்றி ணைந்து பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் விசுவநாதன் தலைமையேற்றார். அஞ்சல் ஓய்வூ தியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சங்க அங்கீ காரம் ரத்து செய்ததை பற்றி எடுத்துரைத்தார். ஓய்வூதியர் சங் கத்தின் மாவட்ட தலைவர் பாண்டியன், பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க முன்னாள் மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியம், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் முகமது ஜாபர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தர்மலிங்கம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். ரத்து செய்யப்பட்ட தொழிற் சங்க அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.