districts

img

தனியார் மயத்தை கண்டித்து போராடும் புதுச்சேரி மின் ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.2- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஒன் றிய அரசை கண்டித்தும், அங்கு போராடும்  மின் ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நட வடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றுது. புதுச்சேரி மாநில மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவ டிக்கையை கண்டித்தும், மின்துறையை பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க வேண் டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுச் சேரி மின்வாரிய ஊழியர்கள் கடந்த செப்.28 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற் கிடையே புதுச்சேரி மின்வாரிய ஊழியர்க ளின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மின் வாரிய பொறியாளர் தொழிலாளர் கூட்ட மைப்பின் சார்பில்  நாடு முழுவதும்  ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க திட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

இதில், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் பி. ஜீவா, திட்ட செயலாளர் டி.லெனின் மகேந் திரன், சம்மேளன திட்ட செயலாளர் என்.தேவ ராசன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், ஏஐசி சிடியு மாநிலத் தலைவர் சி.முருகன், அம்பேத் கர் எம்ளாயிஸ் யூனியன்  திட்ட செயலாளர் மாதேசன், எம்ளாயீஸ் பெடரேசன் திட்ட செய லாளர் கோகுல்தாஸ், அண்ணா தொழிற் சங்க திட்ட பொருளாளர் முனியப்பன், தொழி லாளர் பொறியாளர் ஐக்கிய சங்க திட்ட செய லாளர் கோடீஸ்வரதேசாய், மாவட்ட நிர்வாகி ஷாகின்ஷா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொருளாளர் வி.சீனி வாசன் நன்றி கூறினார்.

சேலம்

மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு சிஐ டியு மின்ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி வி.இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதேபோல் உடையாப் பட்டி பகுதியில் உள்ள மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சேலம் மின் பகிர்மான வட்டக் கிளை தலைவர் கருப்பண்ணன், செயலா ளர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.