நாமக்கல், நவ.12- நுண் நிதி நிறுவனத்தின் அடாவடி யால் உயிரிழந்த தொழிலாளியின் குடும் பத்திற்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விசைத்தறித் தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அருகே உள்ள வட்டமலை பகுதி யைச் சேர்ந்தவர் ஞானசேகரன். விசைத் தறித் தொழிலாளியான இவர், 5 நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள் ளார். உடல் நலக்குறைவால் பணிக்கு செல்ல முடியாததால் ஏற்பட்ட பொரு ளாதார பாதிப்புகளால் கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நுண் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழி யர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் மனவேதனை யடைந்த ஞானசேகரன் கடந்த அக்.25 ஆம் தேதியன்று, கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலாளி ஞானசேக ரனை இழந்து மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் தவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண் டும். குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும். ஞானசேகரனின் குடும்பத்தார் வசிப்பதற்கு வீட்டுமனை வழங்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது சட்டரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சங்க நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், நகரச் செயலாளர் கே.பாலுசாமி, சிபிஎம் முன்னாள் நகரச் செயலாளர் சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகி எம்.ஆர்.முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி சி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஞானசேகரனின் குடும் பத்தார் வசிக்கும் வகையில், இலவச வீட்டு மனை வழங்குவதற்கு அரசிடம் ஆவண செய்வதாக வட்டாட்சியர் சிவக் குமார் உறுதியளித்தார். மேலும், தற் கொலைக்கு சம்பந்தமான நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் அதிகாரிகள் உறுதிய ளித்தனர்.
கடன் தொல்லை: முதியவர் தற்கொலை
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கருபையனஅள்ளி கிராமத் தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (எ) பாபு (66). கூலி தொழிலாளியான இவ ருக்கு லட்சுமி (56) என்ற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ள னர். இளங்கோவன் (எ) பாபு திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவ்வப்போது மனைவிக்கு போன் செய்து கடன் தொல்லை யில் இருப்பதாகவும், அதனால் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித் துள்ளார். இந்நிலையில், நவ.10 ஆம் தேதியன்று வீட்டுக்கு வருவதாக தெரி வித்த அவர், திங்களன்று அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலை யில் இருந்துள்ளார். இதுகுறித்து பென்னாகரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.