திருப்பூர், நவ.20 - பெருமாநல்லூர் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை தாலுகா மருத்துவமனை யாக தரம் உயர்த்தக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்மு றைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். பெருமாநல் லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தில் விடுப்பட்டுள்ள குட்டை களை உடனடியாக இணைக்க வேண் டும். ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப் பட்ட பட்டாவிற்கு நிலம் அளந்து தர வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு சார்பில் பெருமாநல்லூரில் கண்டன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈட்டிவீ ரம்பாளையம் கிளைச்செயலாளர் கே.சுப்பிரமணியம் தலைமை வகித் தார். இதில், வடக்கு ஒன்றியச்செய லாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப் புசாமி, இளங்கோ, சந்தோஷ், முன் னாள் ஒன்றியச்செயலாளர் கே.பழ னிசாமி, விவசாய சங்க செயலாளர் கே.ரங்கசாமி உடபட திரளானோர் பங்கேற்றனர். முடிவில் பெருமா நல்லூர் பி கிளைச் செயலாளர் சி. கோவிந்தசாமி நன்றி கூறினார்.