districts

img

அரசு பணிகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு காதுகேளாத, வாய்பேச முடியாதவர்களுக்கு ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 24- காது கேளாத, வாய் பேச முடியாத திற னற்றவர்களுக்கு அரசு பணிகளில் ஒரு சத விகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கம் மற்றும் தமிழ்நாடு காது கேளாதோர்-வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  காதுகேளாதோர், வாய் பேசாதோர் புரிந்து கொள்ள கூடிய வகையில் அனைத்து மாவட் டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துறை அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அலு வலகம் மற்றும் பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நிய மிக்க வேண்டும். மாநில முழுவதும் காது  கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலைபார்ப்பவர் களை அரசாணை எண் 151-னின் படி உடனடி யாக நிரந்தர பணி அமர்த்த வேண்டும். அரசு பணிகளில் காதுகேளாதோர் மற்றும் வாய்  பேசாதவர்களுக்கு 1 சதவிகித இட ஒதுக்கீடை முறையாக வழங்க வேண்டும். காதுகளாக மற்றும் வாய் பேசாத குடும்பங்களை சார்ந்த அனைத்து குடும்ப அட்டைகளையும்  ஏஏஒய் மற்றும் பி.எச்.எச் குடும்ப அட்டைகளாக மாற்றி  தர வேண்டும்.

கடுமையாக பாதிக்கப்பட்ட காதுகேளாதோர், மற்றும் வாய்பேசாதோர் ஆகியோரை கடும் ஊனமுற்றோர் பட்டிய லில் இணைத்து அவர்களுக்கு மாதந்திர பரா மரிப்பு உதவித்தொகை ரூ.5000 வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாற் றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.நித்தியா தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாநில பொருளாளர் கே.ஆர்.சக் கரவர்த்தி, மாவட்ட செயலாளர் எம்.மாரி முத்து, காதுகேளாதோர்- வாய்பேச முடியாத உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செய லாளர் சி.திருஞானம், பொருளாளர் ஜபியல் லாகான் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதில், திரானோர் பங்கேற் றனர்.

கோவை

இதேபோன்று கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மக்களின் கவனத்தை ஈர்க்க விசில் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட கிளை தலைவர் ஆர். சுரேஷ் தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் விஜயராகவன், கோவை  மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் டி. இளையராஜா, எஸ்.தாஸ், டி.மாணிக்கம் மற் றும் காது கேளாதோர்-வாய் பேசாதோர் உரி மைகளுக்கான அமைப்பின் மாவட்ட கிளைச் செயலாளர் கே.பாபு, பொருளாளர், எஸ்.ரா கவி ஆகியோர் போராட்டத்தின் நோக்கங் களை விளக்கினார். அஷ்ரப் செய்கை மொழி யில் விளக்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கோரிக்கை மனுவினை கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சி யர், கோரிக்கைகள் சம்பந்தமாக வரும் புத னன்று (நாளை) சந்தித்து பேசுவதாகவும், உட னடியாக தீர்வு ஏற்படும் வகையில் நடவ டிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள தாக தெரிவித்தார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆன்ட் ரூஸ் பாபு தலைமை ஏற்றார். மாவட்ட செயலா ளர் சகாதேவன், பொருளாளர் ராஜு ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொறுப்பாளர்கள் ராதாகிருஷ் ணன், ஜெகதீஸ், நகர செயலாளர் செந்தில் உட் பட திரளான மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, ஆட்சிய ரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.