districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.30- பால் கொள் முதல் விலையை  உயர்த்த வலியுறுத்தி சித்தோடு ஆவின் முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொள்முதல் விலையை லிட்ட ருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பா லுக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.54 என அறிவித்திட வேண்டும். ஊக்கத் தொகை ஒரு லிட்டருக்கு ரூ.5 வீதம் வழங்க வேண்டும். பால் பாக்கிகள் முழுவதையும், ஊக்கத்தொகை போனஸ் ஆகியவற்றையும் தீபாவ ளிக்குள் வழங்க வேண்டும். சத்து ணவு திட்டத்தில் பால் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய லாளர் சி.பெரியசாமி தலைமை வகித் தார். இதில், மாநில பொதுச்செயலா ளர் பி.பெருமாள், மாநிலப் பொருளா ளர் ஏ.எம்.முனுசாமி, மாநிலக்குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, தமிழக விவசாயிகள் சங்கம் சிவ சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி உரையாற்றினர்.  இதில், ஏராளமான பால் உற்பத்தி யாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆவின் நிர்வாகத்தில் மனு அளித்தனர்.