ஊதிய உயர்வு நிலுவைத் தொகையினை உடனடி யாக வழங்க வலியுறுத்தி சேலம் உடையாபட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும், மேட்டூர் பகுதியில் அனல் மின் நிலையம் முன்பும் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் கருப்பண்ணன், செயலாளர் ரகுபதி, பொருளாளர் பழனிசாமி உள்ளிட்ட திரளான மின்வாரிய தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேட்டூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநிலச் செயலாளர் இளங்கோ, சிவகுமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோட்டில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோபி திட்ட துணைத்தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் கே.பாண்டியன் சிறப்புரையாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.