உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் சார்பில், நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் சங்கத் தலைவர் காளத்திநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 40க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.