தருமபுரி, ஜூன் 10- தொப்பூர் அருந்ததியர் இளை ஞர்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசா ரணை நடத்தக்கோரி சிபிஎம், விசிக, திக உள்ளிட்ட இயக்கங்களின் சார் பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருந்ததியர் இளைஞர்கள் சிவா, தமிழ்செல்வன், சசிதரன் ஆகியோர் மீது சாதி ஆதிக்கசாதியினர் தாக்கு தல் நடத்தியுள்ளனர். இதில் சிவா என்பவரின் கால் வெட்டப்பட்டது. மற்ற இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்ப வத்தை தொப்பூர் காவல்துறை விபத்து என்று பதிவு செய்துள்ளது. சாதிய நோக்கத்தால் தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தை மூடி மறைக்கும் விதமாக தருமபுரி மாவட்ட காவல்துறை செயல்படுகி றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுத லைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தலித் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். டி.மாதை யன், மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச் சந்திரன், பொருளாளர் கே. கோவிந்தசாமி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், தமிழ் புலிகள் கட்சி யின் மாவட்ட தலைவர் சபாபதி, தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முரு கன் மற்றும் விசிக நிர்வாகிகள் தமிழ்செல்வன், கி.கோவேந்தன், ஏ.சி.பாவரசு, பொ.மு.நந்தன், உள் ளிட்டோர் பங்கேற்று பேசினர். இதில், ஏராளமானோர் பங்கேற்ற னர்.