நாமக்கல், டிச.3- நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் ராசிபுரம் தாலுகா பட்டணம் பேரூராட்சியை அறிவிக்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர்.சி.துரைசாமி, மாவட்ட செய லாளர் வீ.பி.சபாபதி, பட்டணம் பேரூராட்சி தலைவர் ரஜினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதைத் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள், பட்டணம் பேரூ ராட்சி நிர்வாக அதிகாரியிடம் வழங்கப்பட்டது.