districts

img

மின்வாரிய மேற்பார்வை பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச. 31 - கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளரை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், முறைகேடாக வழங்கப்பட்ட விருப்ப மாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், முறைகேடாக இடமாறுதல் உத்தரவு வழங்கிய மேற்பார்வை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் கேப்பர் மலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்டச் செயலாளர் என்.தேசிங்கு, பொருளாளர் கோவிந்தராசு ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட இணை செயலாளர்கள் ஜீவா, ராஜகோபால், வடிவேலன், ஞானசேகரன், வீராசாமி, சுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவர்வர்கள் ஜெயராமன், ஜெயக்குமார், நல்லதுரை, கண்ணன், சேங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.