சேலம், மே 18- அரிசி கடத்தலுக்கு துணை போவதுடன், அதனை தடுத்திடும் வாலிபர் சங்க நிர்வாகி கள் மீது பொய் வழக்கு போட்டுவரும் உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளரை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் மக்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக மாறியுள் ளது இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரி களிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனுக்களை அளித்தும், பல கட்ட போராட்டங்களையும் முன்னே டுத்து வந்தனர். மேலும், அரிசி கடத்தலில் ஈடு படுவோரை கையும், களவுமாக பிடித்து குற்றப்புலனாய்வுத்துறை உணவு பொருள் வழங்கல் துறையினரிடம் ஒப்படைத்துள்ள னர். இருந்தபோதும், மீண்டும் மீண்டும் ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து தடையின்றி நடந்து வருகிறது.
குறிப்பாக, உணவு பொருள் வழங்கல் குற் றப்புலனாய்வு துறை ஆய்வாளர் பாலமுருகன் மேற்பார்வையிலேயே இந்த அரிசி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், அதற்காக கடத்தல் காரர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அதனை அவர் கண்டும், காணாமல் இருப்ப தாக கூறப்படுகிறது. அதேநேரம், அரிசி கடத்தலை தடுத்து வரும் வாலிபர் சங்கத்தினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தும், ரவுடிகளை வைத்து மிரட்டி வருகிறார். ஆகவே, உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளர் பாலமுருகன் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர் சங்கத்தின் கிழக்கு மாநகர குழு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாநகர துணை தலைவர் பி. வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட் டத்தில் மாநகர செயலாளர் வி.பெரியசாமி மாநகர துணை செயலாளர் எம். தமிழ்ச் செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம். குணசேகரன், பொன்.ரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.