நாமக்கல், அக். 21- விசைத்தறி தொழிலில் பணி யாற்றும் அனைத்து பிரிவு தொழி லாளர்களுக்கும், 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு இன் னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் , இன்னமும் தீபாவளி போனஸ் ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைக்கு அழைக்காத விசைத் தறி ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண் டித்தும், பட்டை நாமம் போட்டு கையில் தட்டேந்தி கண்டன ஆர்ப் பாட்டம் ஞாயிறன்று நடைபெற் றது. பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர் வாகி ஏ.அசன் தலைமை ஏற்றார். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை களை விளக்கி நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம். அசோகன், மாவட்ட தலைவர் கே. மோகன், ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக, போனஸ் விவகா ரத்தில் அலட்சியமாக நடந்து கொள் ளும் விசைத்தறி நிர்வாகங்களை கண்டித்து, பட்டை நாமம் போட்டு, கையில் தட்டேந்திய படி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.