districts

img

சமூக விரோதிகளிடமிருந்து ஊழியர்களை பாதுகாத்திடு

மேட்டுபாளையம், நவ. 8– பணியிட பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வலியு றுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் மேட்டுபாளையம், சிறுமுகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கடந்த மாதம் 31 ம் தேதி சிறுமுகையில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர் விஜய் ஆனந்த் என்பவர் மது விற்பனை  தொகையான ரூபாய் பத்து லட்சத்தை வங்கி யில் செலுத்த தனது இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து பட்டாக்கத்தியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க ஒரு  கும்பல் முயன்றது. பட்டப்பகலில் நடந்த  இத்துணிகர வழிப்பறி முயற்சியின் போது பொதுமக்கள் திரண்டதால் அக்கொள்ளை கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று  விட்டனர். காயமடைந்த டாஸ்மாக் விற் பனையாளர் விஜய் ஆனந்த் கொடுத்த புகா ரின் பேரில், இக்கொள்ளை முயற்சியில் ஈடு பட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை இரு  தினங்களுக்கு முன்பு போலீசார் கைது  செய்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதியில் இந்தியன்  வங்கி கிளையில் விற்பனை தொகையினை செலுத்த சென்ற டாஸ்மாக் விற்பனையாள ரிடமும் இதே போன்ற கொள்ளை முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதே போன்று சிறுமுகையில் கடந்த இரண்டு  வாரங்களுக்கு முன்பு மதுக்கூடத்தின் மேற் பார்வையாளர் தாக்கப்பட்டார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நரசிம்ம நாயக் கன்பாளையத்தில் டாஸ்மாக் ஊழியர் தாக் கப்பட்டார். இதுபோன்று மாநிலம் முழுவ தும் தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் வங்கி யில் பணம் செலுத்த செல்வதை நோட்ட மிட்டு குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு கின்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களை  கண்டித்தும், தங்களுக்கு பணியிட பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

டாஸ்மாக் விற்பனை தொகையினை வங்கி நிர்வாகமே நேரிடையாக வந்து வசூல் செய்து கொள்ள வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் சிறுமு கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் சிஐடியு ஜான் அந்தோனிராஜ், எல்பிஎப் நித்தியானந்தம், ஏஐசிசிடியு மதியழகன், பணியாளர் சங்கம் புருசோத்தமன், பாட்டாளி தொழிற்சங்கம் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, டாஸ் மாக் ஊழியர்களின் உயிருக்கும் உடமைக் கும் உத்தரவாதமளிக்க வேண்டும். வாடிக் கைகயாளர்கள் விரும்பாத மதுவகைகளை டாஸ்மாக் கடைகளில் திணிக்காதே என்றும், சட்டவிரோத எப்எல் 2 தனியார் மதுக் கூடங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.  முன்னதாக வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடித்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வ ராஜ் தலைமையிலான தனிப்படை போலி சாருக்கு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.