நாமக்கல், அக். 22- பால் கொள்முதல் விலை மற்றும் 14 அம்சக் கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின் பாலுக்கு கொள் முதல் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது உள்ள சூழலில் தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கலப்புத் தீவனம் உட்பட அனைத்துப்பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. அதனால் பசும்பால் லிட்டர் 1 க்கு ரூ.42 ம், எருமைப்பால் லிட்டர் 1க்கு ரூ.51 ம் வழங்கவேண்டும் உள் ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், பாலமேடு பால் சொசைட்டி முன்பு வெள்ளியன்று ஆரப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எல்.பி.மனோகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்க மாவட்ட உதவி தலைவர் பூபதி துவக்கி வைத்தார். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட பொருளாளர் தங்க ரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்வம் நன்றி கூறினார். இதில் பெண்கள் உள்ளிட்ட திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லியாபாளையத்தில் பால் சொசைட்டி முன்பு வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு என்.ஜோதி தலைமை தாங்கினார். கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் வி.சதாசிவம் பேசினார். இதில் திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர். பாப்பாரப்பட்டி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் தனபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ். தீர்த்தகிரி, மாவட்ட தலைவர் கே. அன்பு, மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.சின்னசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆ. ஜீவானந்தம், பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் ஆர். சக்தி வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உரையாற் றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கால்நடை களோடு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.