districts

img

நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தாதே - அக்னிபாத் திட்டத்தை கைவிடு

கோவை, ஜூலை 5- நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறி யாக்கும், ராணுவத்தில் ஒப்பந்த முறையை புகுத்தும், அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவையில் திங்களன்று இடது சாரி இளைஞர், மாணவர் அமைப்பினர் இனைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சிவானந்தா காலனியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் தலைமை தாங்கினார். இதில், அனைத்திந்திய மாண வர் பெருமன்ற மாநிலத் தலைவர் மெள.குணசேகரன், மாவட்ட செயலாளர் வசந்த்  குமார், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் பெரோஸ் பாபு, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, மாவட்ட தலைவர் அசாருதீன் உள் ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள், இந்திய ராணுவத்திற்குள் ஆர்எஸ் எஸ்சை உள்நுழைக்காதே. நாட்டின் பாது காப்பை பலவீனப்படுத்தாதே, இளைஞர் களின் வேலை கனவை சீர்குலைக்காதே உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். முடி வில் பாபு நன்றி கூறினார்.