districts

img

நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மார்ச் 1- நீதித்துறை ஊழியரின் தற்கொலைக்குக் காரணமான நீதி பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதித்துறை ஊழியர்  சங்கத்தினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட நீதித்துறை ஊழியர் அருண் மாரிமுத்து வின் தற்கொலைக்கு காரணமான ஊழல் தடுப்பு நீதிமன்ற  நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அருண் மாரிமுத்து  குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அலுவலக உத வியாளர்களின் பணி நேரத்தை வரன்முறைப்படுத்த வேண் டும் என அருண்மாரி முத்துவின் இறப்பிற்கு நீதிகேட்டு நீதித் துறை ஊழியர் சங்கத்தினர் ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தின் முன் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கத் தலைவர் ரங்கராஜ்  தலைமை வகித்தார். இதில், திரளான நீதித்துறை ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.