தருமபுரி, டிச.23- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களை பழைய ஓய்வூதிய திட் டத்தில் இணைக்க வேண் டும். சத்துணவு ஊழியர்களின் பணியை நிரந் தமாக்கி, மறுக்கப்பட்ட சலுகைகளை உடன டியாக வழங்க வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சத்துணவு ஊழியர் சங்க வட்டகிளைத் தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் வட்டகிளைச் செயலாளர் பூங்கொடி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட துணைத் தலைவர் சதீஷ், வட்டச் செயலாளர் மாணிக் கம், பொருளாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.