districts

img

கோழி வளர்ப்புக் கூலியை உயர்த்தி தரக்கோரி விவசாய பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.25- விவசாயக் கோழி பண்ணையாளர் களுக்கு, கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்குவதற்கு பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு  (பி.சி.சி.,) பேச்சுவார்த்தை நடத்த அறி வுறுத்துமாறு திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பாக விவசாய கோழிப் பண்ணையாளர்கள் நலச் சங்கத்தினர் கோழியுடன் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர், கோவை, ஈரோடு, திண் டுக்கல் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. பல்ல டத்தை தலைமையிடமாக கொண்ட கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. பி.சி.சி., வாயிலாக கோழிக் குஞ்சுகளை பெற்று வளர்க் கும் பண்ணையாளர்கள், அதற்கான வளர்ப்பு கூலி பெறுகின்றனர். இந்நி லையில் தற்போது, ஒரு கோழிக்கு வளர்ப்பு கூலியாக  குறைந்தபட்சம், ரூ.6.50 வழங்கப்படுகிறது. இதை ரூ.12 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என  கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு  பல்லடத்தில் உள்ள பி.சி.சி., அலுவல கத்தை தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நல  சங்கத்தை சேர்ந்த கறிக்கோழி பண் ணையாளர்கள் ஏராளமானோர் முற் றுகையிட்டனர்.  அப்போது கூலி உயர்வு குறித்து உடனடியாக பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இல்லையெனில்,  அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரை வில் அறிவிக்கப்படும் என எச்சரிக்கை  விடுத்திருந்தனர். ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக பி.சி.சி.,நிர்வாகம் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. ஆனால் இது வரை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக கோழிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலு வலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.