ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் கே.ஜி.கரூரான், வட்ட நிர்வாகிகள் காரல் மார்க்ஸ், கிருஷ்ணன், திம்மன் உட்பட பலர் கலந்த கொண்டனர்.