districts

img

மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 5 - மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்து மூன்று  ஆண்டுகள் நிறைவடைந்தும் ஊதிய உயர்வு  வழங்கப்படாததைக் கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் பி.என்.ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக திங்க ளன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் மின் பகிர்மான வட்டத் தலைவர் பி.பாபு தலைமை வகித்தார். இதில் மின் வாரியத்தில் 58ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவும், அவுட் சோர்சிங் விடுவதைக் கைவிடவும், பிபி 2 ஐ  உடனே கைவிடவும், ஊதிய உயர்வை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவும் வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மின் ஊழியர் கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு திருப்பூர் மின் பகிர்மான வட்டச்  செயலாளர் ஆர்.நாகராஜன் உரையாற்றி னார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஒய்.அன்பு போராட்டத்தை ஆதரித்துப் பேசி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சங்கப்  பொருளாளர் கே.மோகன்தாஸ் உள்பட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.