ஈரோடு, அக்.27- இஸ்ரேலின் போர் வெறியைக் கண்டித்து, சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் அரசின் போர் வெறியைக் கண்டித்தும், பாலஸ் தீன மக்களுக்கு துணை நிற்போம், பாலஸ்தீனம், லெப னான், சிரியா நாடுகளின் மீது இஸ்ரேல் நடத்துகிற போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ஈரோடு மாவட்டம், பி.பெ. அக்ரஹாரம் வண்டிப்பேட்டை அருகில் சனியன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில உதவித்தலைவர் ப.மாரி முத்து தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி வரவேற்றார். அகில இந்திய சமாதான ஒரு மைப்பாட்டுக் கழகச் செயலாளர் ஏ.ஆறுமுகநயினார் சிறப்பு ரையாற்றினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பாளர் சி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், உதவிச்செயலாளர் முகமது நாசர் அலி நன்றி கூறினார்.