districts

img

மணிப்பூர் வன்முறை: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 27- மணிப்பூர் மாநிலத்தை அழிக் காதே, மக்கள் உயிருக்கும், உடை மைக்கும் பாதுகாப்பு அளித்திடு, குக்கி இன பெண்களை நிர்வாண மாக்கி வல்லுறவு செய்த கொடிய வர்களை கைது செய், மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் ராஜி னாமா செய்ய வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சத்தியமங்கலம் வடக்குப் பேட்டையில் கட்சியின் தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்  செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, சிஐடியு மாவட்ட உதவித் தலை வர் கே.மாரப்பன், மாற்றுத் திற னாளி சங்க நிர்வாகி ராம்தாஸ் ஆகி யோர் உரையாற்றினர். இறுதியாக  நகரக் கிளை செயலாளர் பி.வாசு தேவன் நன்றி கூறினார்.  இதோ போல் பவானி வட்டம், கவுந்தப்பாடி 4 ரோட்டில் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெக நாதன், ஆப்பக்கூடல் பேரூராட்சி கவுன்சிலர் கே.விஜயலட்சுமி, சிஐடியு என்.பூபதி, எம்.ஆர்.பெரிய சாமி, எல்.அழகப்பன், பிஎஸ்என் எல் எம்.நடராஜன், மாதர் சங்கச் செயலாளர் பி.தளிர்கொடி, தவிச செயலாளர் என்.பாலமுருகன், வாலிபர் சங்கச் செயலாளர் பி. கோபாலகண்ணன் மற்றும் மதிமுக  ஒன்றியச் செயலாளர் வீரக்குமாரன்  ஆகியோர் கண்டன உரையாற் றினர். நிறைவாக கே.ஆர்.சண்முகம் நன்றி கூறினார். கோபியில் பேருந்து நிலை யத்தில் தாலுகா குழு உறுப்பினர் வி.ஏ.துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.எம்.முனுசாமி, கே.ஆர். விஜயராகவன், நகரச் செயலாளர்  என்.கே.நடராஜன், கணேசன்,  மாதர் சங்க தாலுகாக்குழுத் தலை வர் முத்தாயம்மாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பிஎஸ்என்எல்

இதோ போல், மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன் முறைகளை கண்டித்து ஈரோடு,  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு  மற்றும் பிஎஸ்என்எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோடு டெலிபோன் பவன்  அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர்  தம்பிக்கலையான், ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலை வர் மாணிக்கம், ஒப்பந்த ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் சிவக் குமார்,  மாவட்டச் செயலர் கே. பழனிச்சாமி ஆகியோர் தலைமை  வகித்தனர்.  ஓய்வூதியர் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் சி. பரமசிவம் கண்டன உரையாற்றி னார். பிஎஸ்என்எனல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாலு நன்றி கூறினார். இதில், திர ளான ஊழியர்கள் கலந்து கொண் டனர். 

கோவை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், காரமடை பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜ லட்சுமி தலைமை வகித்தார். இதில்,  மாதர் சங்க மாநில பொதுச்செய லாளர் அ.ராதிகா, மாவட்டச் செய லாளர் சுதா, மாவட்டத் தலைவர்  ஜோதிமணி உட்பட 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், காரமடை நகராட்சி கவுன் சிலர் பிரியா நன்றி கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில், பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தவாறு கோவை தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  பேரூர்  இதோ போல்,மணிப்பூர் வன் முறையை கண்டித்து சிபிஎம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பேரூர் நகரக் குழு சார்பாக  செல்வபுரம் பகுதியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. போராட் டத்திற்கு நகரக்குழு செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன், வாலிபர் சங்கப் பொருளாளர் தினேஷ் ராஜா,  மாதர் சங்கப் பொருளாளர் உஷா  உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

பிஎஸ்என்எல்-தருமபுரி 

இதோபோல், மணிப்பூர் வன் முறை சம்பவத்தை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வுப் பெற்றோர் அமைப்பின் மாவட்டத்  தலைவர் ஆர்.கோபாலன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்  ஊழியர் சங்க பி.கிருஷ்ணன், ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் டி.பாஸ் கரன், ஒப்பந்த ஊழியர் சங்க  மாவட்டப் பொருளாளர் ஜோதி,  உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு அகில இந்திய நிர் வாகி உமாராணி ஆகியோர் பேசி னர்.