திருப்பூர், பிப்.28 - ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட், சாமானிய ஏழை எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரானதாகவும், கார்ப்ப ரேட் பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாகவும் உள்ளது. இதை எதிர்த்தும், வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், பொது முதலீட்டுக்கு நிதியை அதிகரிக்க வேண் டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதித் திட்டத்திற்கான வேலை நாட்க ளையும், ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களை பாதிக்கும் மறைமுக வரியை குறைக்க வேண்டும். உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட் களுக்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும். உணவு மற்றும் மருந்து கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றாக ரத்து செய்ய வேண்டும் கார்ப்பரேட் வரியை உயர்த்துவது டன், செல்வ வரி விதிக்க வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியி னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தெற்கு ஒன்றியம்
திருப்பூர் - பெரியாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பெரியாண்டிபாளை யம் கட்சிக் கிளைச் செயலாளர் பி.ராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.லட்சுமி, மாவட்டக்குழு உறுப் பினர், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண் டித்து உரையாற்றினர். இதில் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் உட்பட கட்சி அணியினர் திரளானோர் பங்கேற்றனர்.
அவிநாசி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவி நாசி ஒன்றியக்குழு சார்பில் திங்களன்று அவி நாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.பால சுப்பிரமணியம் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.வேலுச்சாமி, தேவி, பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் பி.சுப்பிரமணி, பி.தேவராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பி. கனகராஜ் நன்றி கூறினார்.
மடத்துக்குளம்
விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் வாழ்வாதரங்களை பாதிக்கும் வகையில் உர மானியங்களை வெட்டி இருக்கும் ஒன்றிய அர சின் பட்ஜெட்டை கண்டித்து செவ்வாயன்று மடத் துக்குளம் நால்ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் ராஜ ரத்தினம் தலைமை ஏற்றார். தாலுகா செயல ளார் ஆர்.வி.வடிவேல், தாலுகா குழு உறுப்பி னர்கள் எம்.எம்.வீரப்பன், பன்னீர்செல்வம், ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை ஒன்றியம்
மோடிஅரசின் பட்ஜெட்டைடை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக் கமிட்டியின் சார்பில் செவ்வாயன்று எரி சனம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் தமிழ்த்தென்றல் தலைமை யில் நடைபெற்றது. எரிசினம்பட்டி கிளைசெய லாளர் மணிக்குமார் மற்றம் கொடிங்கியம் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலைவகித்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமார், ஒன்றிய செயலாளர் கி.கனக ராஜ், ஒன்றிய கமிட்டிஉறுப்பினர்கள் ராஜகோ பால், ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். விவசாய சங்க செயலாளர் பாலதண்ட பாணி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் முத் துசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.
குடிமங்கலம்
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட் ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில் செவ் வாயன்று பெதப்பம்பட்டி நால் ரோடு பகுதியில் ஒன்றிய செயலாளர் என்.சசிகலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் வெ.ரங்கநாதன், ஓம்பிரகாஷ் மற்றும் கலை வாணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.
தெற்கு மாநகரம்
திருப்பூர் தெற்கு மாநகரம் கருவம்பாளை யம் தாடிக்கார முக்கில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாந கரக்குழு உறுப்பினர் பா.ஞானசேகரன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை அம்பலப்படுத்தி, மக்கள் கோரிக் கைகளை முன்வைத்து கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர் பி.பாலன் உள்ளிட்டோர் உரையாற் றினர். திரளானோர் கலந்து கொண்டனர்.
வடக்கு ஒன்றியம்
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றி யக்குழு சார்பில் பெருமாநல்லூர் நால் ரோடு சந் திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சிகாமணி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். திரளானோர் கலந்து கொண்டனர்.
பொங்கலூர்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்து பொங்கலூரில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், கமிட்டி உறுப்பினர் எஸ்.சிவசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கமிட்டி உறுப்பினர் மீனா, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன் றிய செயலாளர் ஜி.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.
ஊத்துக்குளி
மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் ஊத்துக்குளி டவுன் பேருந்து நிலையத்தில் தாலுகா குழு உறுப் பினர் ச.சசிக்குமார் தலைமையில் பட்ஜெட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர்கள் வி.காமராஜ், ஆர். மணியன், வி.கே.பழனிச்சாமி, தாலுகா குழுச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, மாணவர் அரங்க கிளைச் செயலாளர் கு.பாலமுரளி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் தாலுகா குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.