நாமக்கல், அக்.29- காவிரி நீர் உரிமையை பெற்றுத் தராத ஒன்றிய அரசை கண்டித்து சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பில் ஞாயிறன்று பள்ளிபாளை யத்தில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே, காவிரி நதிநீர் உரிமையை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தராத ஒன்றிய அரசை கண்டித்து, சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இடதுசாரி சிந்த னையாளர் நடுவோம் பெ.ராஜாராம், மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை ஏற்றனர். தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் சிறப்பு ரையாற்றினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப் பினர் அ.கணேசமூர்த்தி நிறைவுரையாற் றினார். இதில், மறுமலர்ச்சி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,(எம்.எல்), திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, லோக் ஜன சக்தி கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆல் இந்தியன் கிசான் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.