அவிநாசி, ஜூன் 17- சிபிஎம் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம் மீதான தாக்குதலை கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகம் மீது சாதியவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள னர். இதனை கண்டித்து, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இச்சம்ப வத்தில் தொடர்புடைய அனைவரும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன் றிய கவுன்சிலர் முத்துசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பி னர்கள் சுப்பிரமணியம், தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், நசியனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகாச் செயலாளர் பாலசுப் பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர். விஜய ராகவன், மாவட்டக்குழு உறுப்பினர் பா. லலிதா ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தாலுகா கமிட்டி உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கோவை கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு திங்களன்று, இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பு கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் திரளானோர் பங்கேற்று சாதி ஆணவ தாக்குதலுக்கு எதிராக முழக் கங்களை எழுப்பினர்.