districts

img

சிங்காநல்லூரில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

கோவை, மே 28- கோவை, சிங்காநல்லூ ரில் சாலையோரம் இருந்த  ஆக்கிரமிப்புகள் மாநக ராட்சி பணியாளர்களால் இடித்து அகற்றப்பட்டன. கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலையை இணைக்கும் விதமாக காமராஜர் சாலை செல்கிறது. இந்த சாலைகளில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்தன. இதனால், அடிக் கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமை யில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அதிகாரி களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து வியாழனன்று நெடுஞ்சாலை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் மாதேஸ்வ ரன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் ஆறுமு கம், பசும்பொன் மற்றும்  மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத் திற்கு சென்றனர். பொக்லைன் இயந்திரங்கள் உதவியு டன் சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், தள்ளுவண்டிகள், நடைபாதையில் உள்ள கடைகள் ஆகியவற்றை இடித்து அகற்றினர். இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகை யில், இந்த சாலையில் சிறிது தூரம் நான்கு வழி சாலையாக உள்ளது. மீதமுள்ள 10 மீட்டர் அகலத்தில் இருவழி சாலை யாக உள்ளது. இரு புறங்களிலும் தள்ளுவண்டி கடைகள்  நடைபாதை ஆக்கிரமிப்பு ஆகியவை அதிகமாக உள்ளது.  எனவே, இதனை அகற்றும் பணி நடந்து வருகிறது, என்ற னர்.