districts

img

அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்

நாமக்கல், டிச.26- குமாரபாளையம் பகுதியில் அனு மதியின்றி இயங்கிய ஆறு சாயப் பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிலாளர் கள் உதவியுடன் அகற்றினர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் அதன் சுற்றுப்புற பகுதி களில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சாயப்பட்டறைகள் அனுமதியின்றி இயங்குவதுடன், அதிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கின்றனர். இதன் காரணமாக காவிரி ஆறு மாசு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல ஆண்டுகளாக சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கக்கூடிய சாயப்பட்டறைகளை அகற்றி வரு கின்றனர். பல சாய ஆலைகளின் மின் சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இருப் பினும், பல இடங்களில் சாயத்  தொழிற்சாலை மீண்டும் அனுமதி யின்றி இயங்கி வருவதாக வந்த தக வலின்பேரில், வியாழனன்று சாயப் பட்டறைகளில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. குமாரபாளையம் மாசு  கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்குமார், மாசுக்கட்டுப்பாட்டு  வாரிய உதவி பொறியாளர் லாவண்யா மற்றும் ஈரோடு மாவட்ட பறக்கும் படை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் சோதனை மேற் கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குமார பாளையம் பகுதிக்குட்பட்ட சுந்தரம் நகர், நடராஜா நகர், ஓடக்காடு, மற் றும் செல்வா நகர் உள்ளிட்ட பகுதி களில் அனுமதியின்றி இயங்கி வந்த ஆறு சாயப்பட்டறைகளை கட்டிடத் தொழிலாளர்கள் உதவியுடன் சம் மட்டியால் அடித்து உடைத்தனர். அப் பொழுது, அனுமதி பெற்று இயங் கக்கூடிய சாயப்பட்டறைகள் இரவு  நேரங்களில் தண்ணீர் சுத்திகரிக்கா மல் வெளியேற்றி வருகின்றனர். அவர்களை கண்டிக்காமல், சிறு சாய ஆலை உரிமையாளர்களின் பட்ட றைகளை இடித்து வருகின்றனர். இது விசைத்தறி தொழிலை மட்டுமன்றி,  சிறு தொழிலாளர்கள் வாழ்வாதா ரத்தை பாதிக்கும், என அதிகாரிகளி டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.