திருப்பூர், ஏப். 4 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் பகுதியில் நூறாண்டு காலமாக வசித்து வரும் அருந்ததியர் மக்கள் குடியி ருப்புகளை திங்களன்று வருவாய்த் துறை யினர் இடித்து அகற்றினர். அவசர கோலத் தில் அராஜகமான முறையில் வீடுகளை இடிப்பதை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு அடிப்படை வச திகளுடன் மாற்று இடத்தில் பட்டாவுடன் வீட்டுமனை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. பல்லடம் வட்டம், சாமளாபுரம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட 10 ஆவது வார்டு கருப் பராயன் கோவில் வீதியில் 800க்கும் மேற் பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின் றனர். இங்குள்ள குடியிருப்பின் அருகே சாமளாபுரம் குளம் அமைந்துள்ளது. எனவே, நீர்நிலைப் புறம்போக்கு வகை யில் வருவதால் இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித் துறை மூலம் ஒரு மாதத் துக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த நூறாண்டு காலமாக 800க்கும் மேற் பட்டோர் வசித்து வரும் இடம், நீர் நிலைக்கும் பாதிப்பு இல்லாமல், வெள்ளம், மழை இடையூறும் இல்லாமல் மேட்டுப்பாங்கான பகுதியாக உள்ளது. எனவே நீர் நிலைக்கு பாதிப்பு இல்லாத நிலையில், இங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தக் கூடாது என்று அருந்ததியர் மக்கள் கடந்த ஒரு மாத கால மாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த னர். கருப்புக் கொடி ஏற்றி காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர்.
மேலும், கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் நேரடியாக அப் பகுதி மக்களைச் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியும் இந்த மக்களுக்கு ஆதர வாக போராட்டம் நடத்தியது. குறிப்பாக, நீதி மன்ற உத்தரவு என்று இந்த குடியிருப்பு களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற் பட்டால், இப்பகுதி மக்களுக்கு முறை யான மாற்று குடியிருப்பு வசதிகளை ஏற் படுத்திக் கொடுத்து விட்டு அவர்கள் வெளி யேறிய பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், பல்ல டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, செந்தேவிபாளையத்தில் அவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும் என உறுதி அளித்த னர். இந்நிலையில் திங்களன்று சாமளாபுரம் அருந்ததியர் குடியிருப்பில் அமைந் துள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகளை அகற் றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்ட னர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடு களை அகற்றும் பணி நடைபெற்றது. அதிகா ரிகள் வாக்குறுதி அளித்த நிலையில் அவசர மாக, வீடுகளை அகற்றத் தொடங்கி யது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. அத்துடன் வட்டாட்சியர் ஆய்வு செய்து இந்த மக்களுக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட மாற்று இடம் மற்றும் பட்டா ஆகியவற்றில் பல்வேறு குளறுபடிகளுடன் உள்ளது. மேலும், வீடுகளை அகற்ற நோட் டீஸ் வழங்கப்பட்ட பலருக்கு பட்டாவுடன் மாற்று இடம் மறுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ச.நந்தகோபால் உள்ளிட்டோர் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதில் சாமாளா புரம் அருந்ததியர் குடியிருப்பில் வசித்த 50 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்க முடியும் என வட்டாட்சியர் தெரிவித் துள்ளார். இது ஏற்கெனவே மாவட்ட நிர் வாகம் அங்குள்ள அனைத்து குடும்பங் களுக்கும் மாற்று இடம் வழங்குவது என்று அளித்த உறுதிமொழியை மீறுவதாக உள் ளது. எனவே பட்டியல் தயாரித்த அடிப் படையில் அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவும் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியிலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தினர். மேலும், அங்கு குடியிருந்த மக்கள் வீடு களில் உள்ள பொருட்களை சேதாரம் இல்லாமல் அவர்களாகவே அப்புறப் படுத்தி வரும் நிலையில் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அராஜகமான முறையில் வீடுகளை இடிப் பதை ஏற்க முடியாது. இந்த நடவடிக் கையை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து மக்களுக்கும் உரிய மாற்று இடம் அடிப்படை கட்டமைப்பு வசதிக ளுடன் வழங்க வேண்டும். அதுவரை இம் மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த குடி யிருப்பில் வசித்த அனைத்து குடும்பங் களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப் படும் என்று உறுதியளித்தார்.